ஊதிய உயர்வு கேட்டு காகித ஆலைத் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
நாமக்கல், நவ.24- ஊதிய உயர்வு கேட்டு பள்ளிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் காகித ஆலைத் தொழிலாளர்கள் உண்ணா விரதத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் தனியார் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் காகி தங்கள் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரு கிறது. இந்நிலையில் நிரந்தரத் தொழிலாளர்களாக பணியாற் றும் சுமார் 450க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு முறை யான ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து சனியன்று காகித ஆலை வளாகப் பகுதியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண் டனர். சேசாயி காகித ஆலை தொமுச கூட்டு சங்கங்களின் சார்பில், நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு கூட்டு சங்கத் தலைவர் ஏ.எஸ்.சுப்பிரமணியம், துணைத்தலை வர் வெங்கடேஷ் மற்றும் அனைத்து கூட்டு சங்க நிர்வாகி கள் தலைமை வகித்தனர். இதில் தொமுச, ஏஐடியுசி, ஐஎன் டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
ரூ.14 லட்சம் மோசடி: 4 பேர் மீது வழக்கு
சேலம், நவ.24- ஏற்காடு பெண் வியாபாரியிடமிருந்து மிளகு வாங்கிய தில் ரூ.14 லட்சம் மோசடி செய்ததாக, 4 பேர் மீது வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே கரடியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் என்பவரின் மனைவி தனலட் சுமி (41), மிளகு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு தொழில்ரீதியாக கோவை மாவட்டம், திருவிக நகரைச் சேர்ந்த கருப்புசாமி (45) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு அடிக்கடி மிளகு விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று தனலட்சுமியை தொடர்பு கொண்ட கருப்புசாமி, 2 டன் மிளகு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டதற்கேற்ப, அவரும் அனுப்பி வைத்துள்ளார். மிளகை பெற்றுக் கொண்ட கருப்புசாமி ரூ.14 லட்சத்துக்கு 2 காசோலைகளை தனலட்சுமியிடம் கொடுத்துள் ளார். அந்த காசோலைகளை தனலட்சுமி வங்கியில் செலுத் தியபோது, கருப்புசாமியின் கணக்கில் போதிய பணம் இல்லை என்று திரும்பிவந்தது. இதைத்தொடர்ந்து கருப்பு சாமியை கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய தன லட்சுமி, அவரது வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லா ததால் காசோலை திரும்பிவிட்டதாகவும், தன்னிடம் மிளகு வாங்கியதற்கான ரூ.14 லட்சத்தை உடனடியாக அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளார். அதற்கு அவர் விரைவில் பணத்தை கொடுத்துவிடுவதாகக் கூறினார். ஆனால் பல முறை கேட்டும் பணத்தைக் கொடுக்கவில்லை. இதுகுறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் தன லட்சுமி வெள்ளியன்று புகாரளித்தார். அதில் மோசடி செய்த கருப்புசாமி மற்றும் இதற்கு உடந்தையாக இருக்த அவரது மனைவி தேவி, மைத்துனர் பாலமுருகன், உறவினர் முத்து மணி ஆகியோர் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் கருப்புசாமி, தேவி உள்ளிட்ட 4 பேர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மண்ணுடன் விநியோகம் செய்யப்பட்ட குடிநீர்: மக்கள் புகார்
கோவை, நவ.24- வடவள்ளி ஊராட்சி நிர்வாகம் சார் பில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட குடிநீர், மண் மற்றும் குப்பைகளுடன் வந்ததாக பொதுமக் கள் புகார் எழுப்பியுள்ளனர். கோவை மாவட்டம், அன்னூர் ஊராட்சி ஒன்றியம், வடவள்ளி ஊராட் சிக்குட்பட்ட பெரியபுத்தூர் பகுதி பொதுமக்களுக்கு சேறும், சகதியுமா கவும், தூசி கலந்த வகையில் குடிநீர் விநி யோகம் செய்யப்பட்டதால், அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலைக்கு பொது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வடவள்ளி ஊராட்சியை பொருத்தவரை 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோ கம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அப்படி செய்யப்பட்ட போதிலும் அதனை முறையாக சுத்திகரிப்பு செய் யாமல் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கிராமங்களில் உள்ள குடி நீர் தொட்டிகள் முறையாக சுத்தம் செய் யாமல், மாதக்கணக்கில் பராமரிக்கா ததால் சகதிகள் படிந்துள்ளதே, குடி நீர் செம்மண் நிறமாக மாறியதற்கு கார ணம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். தற்பொழுது மழைக்காலம் என்பதால் விநியோகம் செய்யப்பட்ட மோசமான நிலையில் குடிநீர் வருவ தால். அந்த நீரை குடித்து தாங்கள் நோய் தாக்குதலுக்கு ஆளாவதாக புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, குடிநீரை சுகாதாரமாகவும், சுத்தமான முறையிலும் வழங்க வேண் டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள் ளனர்.
மாணவிகளிடம் அத்துமீறல்: ஆசிரியர் கைது
சேலம், நவ.24- எடப்பாடி பள்ளி மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்ட தற்காலிக ஆசிரியரை காவல் துறையினர் கைது செய்த னர். சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் தற் காலிக தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வரும் பிரகதீஷ்வரன் என்பவர், சனியன்று சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகக்கூறி, 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளை மட்டும் வரவழைத் துள்ளார். அப்போது பிரகதீஸ்வரன் மதுபோதையில் இருந்த தாகவும், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வும், மாணவிகள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதைய டுத்து பெற்றோர்களும், அப்பகுதி பொதுமக்களும் பூலாம் பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின் அப்பள்ளிக்கு போலீசாருடன் சென்று பார்த்த போது, ஆசிரியர் பிரகதீஷ்வரன் அவரது வீட்டிற்கு தப்பி சென்றுவிட்டார். உடனடியாக அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் பிரகதீஸ்வரனை கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டி
சேலம், நவ.24- தென்னிந்திய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டி சேலத்தில் நடைபெற்றது. தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் சார்பில், 2024 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய பவர் லிஃப்டிங் சாம்பியன் ஷிப் போட்டி, சேலத்தில் நவ.22, 23, 24 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. சூரமங்கலம் கோட்ட ரயில்வே மேலாளர் அலுவல கம் அருகே உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இப் போட்டியை, ரயில்வே கோட்ட மேலாளர் பி.கே.ஷின்கா துவக்கி வைத்தார். இதில் 220க்கும் மேற்பட்ட தமிழ்நாடு, புதுச் சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் கலந்த கொண் டனர். முடிவில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.
ஒரே மாதிரியான ஏற்றுக்கூலியை நிர்ணயம் செய்திடுக
டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்
பொள்ளாச்சி, நவ.24- மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி யான ஏற்றுக்கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும், என டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சிஐடியு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின், கோவை மண்டல 3 ஆவது மாநாடு, கோவை மாவட்டம், பொள்ளாச்சி - பாலக்காடு சாலையிலுள்ள ஜிடி எஸ் திருமண மண்டபத்தில் தோழர் சீதாராம் யெச்சூரி நினைவரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. மண்ட லப் பொறுப்பாளர் எம்.எஸ்.பீர்முக மது தலைமை வகித்தார். பொள் ளாச்சி பொறுப்பாளர் திருமலை ராஜாராம் வரவேற்றார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரரா ஜன் சிறப்புரையாற்றினார். சுமைப் பணி சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி, மாநில ஒருங் கிணைப்புக்குழு கன்வீனர் எஸ். குணசேகரன், துணை கன்வீனர் எ. பிச்சைமுத்து, மாநிலப் பொதுச் செயலாளர் ஆர்.அருள்குமார், பொருளாளர் பி.குமார், உதவிச் செயலாளர் ஏ.கோவிந்தன் ஆகி யோர் கருத்துரையாற்றினர். சிஐ டியு கோவை மாவட்டச் செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சுமைப் பணி சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜன், மாவட்டத் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், மாநிலம் முழு வதும் இறக்குக்கூலி ஒரே மாதிரி இருப்பதை போல, ஏற்றுக்கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும். டாஸ் மாக் குடோனில் நீண்ட காலமாக பணியாற்றும் சுமைதூக்கும் தொழி லாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். அனைத்து தொழிலா ளர்களுக்கும் பிஎப், இஎஸ்ஐ உள் ளிட்ட சட்ட சலுகைகள் மற்றும் அடையாள அட்டை வழங்க வேண் டும். அனைத்து குடோன்களிலும் குடிநீர், குளியல் அறை, கழிப்பிட வசதியுடன் ஓய்வறை அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதனைத்தொடர்ந்து, சங்கத் தின் கோவை மண்டலப் பொறுப்பாள ராக எம்.எஸ்.பீர் முகமது மற்றும் கோவை தெற்கு - எம்.எச்.ஜஹாங் கிர், கோவை வடக்கு - ஏ.அபுதா ஹிர், திருப்பூர் - சி.கார்த்திக், காங் கேயம் - பி.பொன்னுசாமி, உதகை - ஆர்.ரங்கசாமி, ஈரோடு - எம்.குமர வேல், ஏ.சாமிநாதன், கோபி - கே. ராமசாமி, பொள்ளாச்சி - ஏ.திரு மலை ராஜாராம், என்.மாயவன் உள்ளிட்டோர் மண்டல நிர்வாகிக ளாக தேர்வு செய்யப்பட்டனர். முடி வில், என்.மாயவன் நன்றி கூறி னார். இம்மாநாட்டில், கோவை மண் டலத்தின் பல்வேறு பகுதியில் டாஸ் மாக் குடோன்களில் பணியாற்றும் ஏராளமான சுமைப்பணி தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர். நிர்மல் பள்ளிக்கு நிதியுதவி முன்னதாக, இம்மாநாட்டில், டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஒருங்கிணைப் புக்குழுவின் கோவை மண்டலம் சார்பில், சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனத்திற்கு ரூ.ஒரு லட்சத்து 46 ஆயிரம் நன்கொடையாக வழங் கப்பட்டது. மேலும், சிஐடியு நடத் தும் நிர்மல் பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் நன்கொடையாக வழங்கப்பட்டது.