கோவை, ஜன. 5- மது பாட்டில்கள் வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் பில் வழங்கி விற் பனை செய்வது என கோவை மாவட்ட டாஸ் மாக் அனைத்து சங்க ஆலோசனை கூட்டத் தில் முடிவெடுக்கப்பட்டது. கோவை, கணபதி சிஐடியு இன்ஜினியரிங் சங்க அலுவலகத்தில் கோவை மாவட்ட அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகி கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட் டத்திற்கு, சிஐடியு பொதுச்செயலாளர் ஜான் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். இதில், சிஐடியு டாஸ்மாக் தொழிற்சங்க மாநில துணை செயலாளர் செந்தில்பிரபு, பாட்டாளி தொழிற்சங்கத்தில் மாவட்ட செய லாளர் ஜீவா, ஏடிபி செயலாளர் நெடுமாறன், அரசு பாணியாளர் சங்க செயலாளர் புரு சோத்தமான், ஏடிபி புறநகர் செயலாளர் செந் தில் மற்றும் ஏஐசிசிடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஊழியர்கள் பங்கேற்றனர். இதில், டாஸ்மாக் நிறுவனத்திற்கு சம்பந்த மில்லாத தனி நபர்கள் சிலர் அமைச்சரின் பெயரை பயன்படுத்தி, டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் பாட்டில்கள் எண்ணிக்கை அடிப்படையில் பாட்டில் ஒன்றுக்கு ரூபாய் இரண்டு தர வேண்டும் என்று நிர்பந்தித்து வரு வது குறித்து விவாதிக்கப்பட்டது. இதனை யடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், ஜனவரி 27ஆம் தேதி முதல் ஒவ் வொரு வாடிக்கையாளர்களுக்கும் பில் வழங்கி விற்பனை செய்வது. டாஸ்மாக் கடையிலி ருந்து எவருக்கும் பணம் கொடுப்பது இல்லை யென்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
கோவை மாவட்ட டாஸ்மாக் பணியாளர் களின் கோரிக்கைகளில் தலையீடு செய்ய மத்திய, மாநில தொழிற்சங்கங்களின் தலைமை நிர்வாகிகளை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக இயங்கி வரும் மதுக்கூடங்கள் குறித்தும் இரவு நேர சட்ட விரோத மது விற்பனை குறித் தும் 50 ஆயிரம் துண்டறிக்கைகள் தயார் செய்து மக்களிடம் கொண்டு செல்வது, பணம் கொடுக்க மறுக்கும் பணியாளர்கள் மீது டிஎம், எஸ்ஆர்எம் மூலம் பழிவாங்கும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டால், கூட்டுக்குழு அதை முறியடிக்க ஒன்றினைந்து போராடுவது, ஒரு பணியாளர் கூட பாதிக்கப்படாமல் பாதுகாப் பது என தீர்மானம் இயற்றப்பட்டது. முன்னதாக கூட்டத்தை, சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அரசு பணி யாளர் சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் தீர்மா னத்தை வழிமொழிந்து உரையாற்றினர்.