திருப்பூர், ஆக.18- குளத்துப்பாளையம் பகுதியில் மோச மான நிலையில் உள்ள தார்ச்சாலையை சீர மைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது. திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி தாலுகா, சர்க்கார் பெரியபாளையம் ஊராட் சிக்குட்பட்ட குளத்துப்பாளையம், இரண்டா வது வார்டு பகுதியில் தார்ச்சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பள்ளி குழந் தைகள், வேலைக்கு செல்லும் தொழிலா ளர்கள், பெண்கள் என வாகனங்களில் செல் வோர் அடிக்கடி கீழே விழுந்து விடுகின்ற னர். எனவே, இந்த சாலையை விரைவில் சீர மைத்துத்தர வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.