தாராபுரம் கோட்டாச்சியர் அதிரடி தாராபுரம், பிப்.4- தாராபுரம் அருகே அரசு விதிமுறைகள் மீறி முறைகேடாக குவாரியில் கல் வெட்டி எடுத்த தனியார் குவாரி உரிமையாளர் மீது தாராபுரம் கோட்டாட்சியர் ரூ.9 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரத்து 429 அபராதம் விதித் தார். தாராபுரம் வட்டார பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் அரசு விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப் பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்நிலையில் தாராபுரம் கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து கல் குவாரிகளிலும் அரசு நிர்ணயித்த அளவில் கல் வெட்டி எடுக்கப் பட்டுள்ளதா? அதேபோல நடை சீட்டு படி கல்வெட்டி எடுக்கப்பட்டதா? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தாரா புரம் கோட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பித் தார். அதன்படி கோட்டாட்சியர் குமரேசன் வியாழனன்று தாராபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட குவாரிகளில் ஆய்வு செய்து நடை சீட்டு படி குவாரியில் கல் வெட்டி எடுத்த தில் முறைகேடு நடந்துள்ளதா? என பல் வேறு குவாரிகளை ஆய்வு செய்தார். அப்போது காங்கேயம் வட்டத்துக்கு உட்பட்ட சேனாதிபாளையத்தில் மனோ கரன் என்பவர் குவாரியில் அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகமாக முறைகேடு செய்து, கல் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கல் குவாரியை வருவாய் துறையினர் அளவீடு செய்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக கல் வெட்டியெடுக் கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைய டுத்து அந்த கல் குவாரி உரிமையாளர் மனோ கரனுக்கு கோட்டாட்சியர் குமரேசன் ரூ.9 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரத்து 429 அப ராதம் விதித்தார். இதுகுறித்து, கோட்டாட்சியர் கூறுகை யில், தாராபுரம் பகுதியில் முறைகேடாக செயல்படும் செங்கல் சூளைகளையும் ஆய்வு செய்து வருகிறோம். இதில் முறை கேடு நடந்து இருக்குமேயானால் அந்த செங் கல் சூளை மீது சட்டப்படி கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.