தாராபுரம், செப். 1- தாராபுரம் அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு காரணமாக கரையோர கிராம மக்க ளுக்கு வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமராவதி அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகா நதியிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அமராவதி ஆற்றில் வந்து அடைவதால் ஆற்றின் தண்ணீர் இருக ரையை தொட்டு செல்கிறது. இதனால் பொது மக்கள் யாரும் அமராவதி ஆற்றங்கரையில் குளிக்க, துணி துவைக்க கூடாது என வரு வாய்த்துறையினர் மற்றும் போலீசார் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்.அத்துடன் கரை யோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் தாரா புரம் புறவழிச் சாலை மேம்பாலம் மற்றும் குடி நீர் தடுப்பணை, ஈஸ்வரன் கோவில் ஆற்று பாலம், பழைய ஆற்றுப்பாலம், அலங்கியம் ஆற்றுப்பாலம் மற்றும் கொங்குர் மற்றும் கூடு வாந்துறை, ஆத்துக்கால்புதூர் தரைப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் அமராவதி ஆற்று நீருடன் மழை நீர் கலந்து வருகிறது. இதனால் தாராபுரம் ஈஸ்வரன் கோவில் பகுதியில் பேரி கார்ட் அமைத்து ஆற்றுக்குள் யாரும் சென்று குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை பதாகை வைத்துள்ளனர். பல வருடங்களுக்குப் பிறகு இரு கரைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அருகில் உள்ள சுற்றுவட்டார கிராம மக்கள் குடும்பத்துடன் வந்து அமரா வதி ஆற்றங்கரையோரம் நின்று வேடிக்கை பார்த்தும், இளைஞர்கள் செல்பி எடுத்துக் கொண்டும் வருகின்றனர். ஆர்வ மிகுதியில் வேடிக்கை பார்க்க செல்லும் பொதுமக்களை எச்சரிகை செய்ய ஈஸ்வரன் கோவில் பகுதி யில் போலீசார் ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.