திருச்செங்கோடு, ஜூலை 8- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் திருச்செங்கோடு நகரக் கிளை புதிய அலுவலக திறப்பு விழா வெள்ளியன்று நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் திருச்செங்கோடு நகரக் கிளையின் சார்பில், திருச்செங் கோடு ரவி காம்ப்ளக்சில் புதிய அலுவலகம் திறப்பு விழா கிளை தலைவர் ஆர். நந்தகோபால் தலைமையில் நடைபெற் றது. கிளை செயலாளர் எம். நித்தியானந்தன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜெ.திவாகர் வரவேற்றார். புதிய அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவரும், ஆண்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவருமான ஏ. ஆதிநாராயணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில், தமுஎகச மாவட்ட செயலாளர் எஸ்.சேகரன், தலைவர் சரவணன், சேலம் கோட்டம் காப்பீட்டு கழக ஊழி யர் சங்கத்தின் இணை செயலாளர் எம்.கணேசபாண்டியன், தமுஎகச மாவட்ட துணை தலைவர் ஜீ.கோபி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஆர்.மனோகரன், தவிச மாவட்ட துணை தலைவர் ஆர்.வேலாயுதம் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். முடிவில் தமுஎகச எம். முருகவேல் நன்றி கூறினார்.