districts

img

மாற்றுத்திறனாளிகள் சங்க கிளை அமைப்பு

ஈரோடு, செப்.24- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை சத்தியமங்கலத்தில் அமைக்கப்பட்டது. சத்தியமங்கலம் ஒன்றியம், பழைய கொத்துக்காடு பகுதி யில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கிளை அமைப் புக் கூட்டம் தலைவர் குருசாமி தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் கிளைச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட கிருஷ்ணசாமி அனைவரையும் வரவேற்றார். சங்கத்தின் பெயர் பலகையை மாவட்டச் செயலாளர் ஆ.சகாதேவன் திறந்து வைத்தார். சங்கத்தின் கொடியை ஒன்றியச் செயலா ளர் எஸ்.ஏ.ராமதாஸ் ஏற்றி வைத்தார். ஒன்றியத் தலைவர் பி. ஆனந்தன், துணைத்தலைவர்கள் ராமசாமி, முத்துசாமி மற் றும் ரங்கசாமி, சந்தியா, இண்டியம்பாளையம் கிளைத் தலை வர் ஜெயலட்சுமி உட்பட 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி கள் கலந்து கொண்டனர்.