districts

img

பிஎல்ஐ 2.0 திட்டம் - தமிழக ஜவுளித்துறை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள்

கோவை, அக்.12 - பிஎல்ஐ 2.0 திட்டத்தை தமிழக ஜவுளித்துறை பயன் படுத்தி, ஊக்கத்தொகை பெற்று தொழில் வளத்தை அதிகரிக்க வேண்டும் என இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் அமைப்பின்  ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறுகையில், இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை வர்த்தகம்  செய்து வருகின்றனர். பெரிய அளவிலான உற்பத்தி,  போட்டியிடும் திறன் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்களை  தயாரித்து அதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற் கான முயற்சியாக உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ)  திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன் பெறாது என்ற கருத்து எழுந்தது. இதனிடையே பிஎல்ஐ  2.0 என்ற திட்டத்திற்கான வரைவை ஒன்றிய அரசு கொடுத் துள்ளது. இதற்காக ரூ.4 அயிரத்து 300 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஜவுளித்துறையையும் இணைத்துள்ளது. இதன் மூலமாக ரூ.15 கோடி முதலுடன் தொழில் தொடங்குவோர் அல்லது ஏற்கனவே உள்ள தொழிலை அபிவிருத்தி செய்வோர் ஆண்டுக்கு ரூ.30 கோடி  வர்த்தகத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு 8 சதவிகிதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேலும், ரூ.30 கோடி  முதலுடன் தொழில் தொடங்குவோர் அல்லது ஏற்கனவே உள்ள தொழிலை அபிவிருத்தி செய்வோர் ஆண்டுக்கு ரூ.60  கோடி வர்த்தகத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு 9 சதவி கிதமும், ரூ.45 கோடி முதலுடன் தொழில் தொடங்குவோர் ஆண்டுக்கு ரூ.90 கோடி வர்த்தகத்தில் ஈடுபட்டால் அவர் களுக்கு 10 சதவிகிதமும் ஊக்கத்தொகை வழங்கப் படுகிறது. இந்த திட்டத்தில் தமிழகத்திலிருந்து 6 முதல் 7 நிறுவ னங்கள் மட்டுமே இணைந்தன. இந்த இரண்டாவது திட்டத்தில்  தொழில் நிறுவனங்கள் இணைவது எளிமையாக்கப் பட்டுள்ளது. இதனை தமிழக ஜவுளித்துறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட ஜவுளி  நிறுவனங்கள் இதற்கு தகுதி பெற்றுள்ளன. இந்த திட்டத்தை ஜவுளித்துறை பயன்படுத்திக் கொள்வதன் மூல மாக ஏற்றுமதியை நாம் அதிகரிக்க முடியும். மேலும், கோவை  உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் மட்டும் 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்க முடியும். இதுகுறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தி வருகிறோம். மேலும், தொழில் துறையினருக்கு ஆலோசனை வழங்கும் கேபிஎம்ஜி என்ற நிறுவனத்துடன் இணைந்து எங்கள் அமைப்பு உறுப்பினர்களுக்கு வழிகாட்டுதலையும் கொடுக்க முடிவு செய்துள்ளோம். இந்த வரைவு குறித்து தொழில்துறையினரின் ஆலோசனைகளை ஒன்றிய அரசு கேட்டுள்ளது. இதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளோம். எங்கள் அறிக்கையை ஒன்றிய அமைச்சரிடம் வழங்க உள்ளோம், என்றார்.