districts

img

நூல் வெளியீட்டு விழா

ஈரோடு, ஆக. 5- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சூழல் அறி வோம், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் அழிக்கால் பேரிடர் நூல் வெளியீட்டு விழா ஈரோட்டில் நடைபெற்றது. செங்குந்தர் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அறி வியல் இயக்க மேனாள் தலைவர் பேரா.நா.மணி தலைமை ஏற்றார். தமுஎகச மாவட்டத் தலை வர் மு.சங்கரன் வரவேற்றார். பேரா.வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய அழிக்கால் பேரிடர் நூலை செங்குந்தர் மேல் நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.சிவானந்தன் வெளியிட்டு உரையாற்றினார்.  இதில், பழங்குடி மக்கள் நலச்சங்க நிர் வாகி வி.பி.குணசேகரன் நூலைப் பெற்றுக்  கொண்டார். சூழல் அறிவோம் தீபக் வெங்க டாசலம், தமுஎகச மாவட்டச் செயலாளர் இ. கலைக்கோவன் ஆகியோர் மதிப்புரை வழங் கினர். முடிவில், நூல் ஆசிரியரும், கடல்  சூழலியல் ஆய்வாளருமான பேராசிரியர்  வறீதையா கான்ஸ்தந்தின் ஏற்புரையாற்றி னார். அறிவியல் இயக்க நிர்வாகி செ.கா நன்றி  கூறினார்.