சென்னை, மே 5 -தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற் குழு உறுப்பினர் சைதைஜெ-வின் தந்தை பொன். நாராயணப்பெருமாள் சனிக்கிழமையன்று (மே 4) காலமானார். அவருக்கு வயது 87.குமரி மாவட்டம், இராஜக்கமங்கலம் அருகே உள்ள சூரப்பள்ளம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப் பட்டிருந்த உடலுக்கு தமுஎகச குமரி மாவட்டத் தலைவர் ஜெயகாந்தன், செயலாளர் ஹசன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஞாயிறன்று (மே 5) அன்னாரது இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.தமுஎகச கவுரவத்தலைவர் ச. தமிழ்ச் செல்வன், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, துணைப் பொதுச் செயலாளர்கள் மதுக்கூர் ராமலிங்கம், கருணா உள்ளிட்டோர் செல்போன் வாயிலாக சைதை ஜெ-விற்கு ஆறுதல் கூறினர்.