மேட்டுப்பாளையம், டிச.24- கோவை மத்திய சிறைச்சாலையை, கோவை கார மடை அடுத்த பிளிச்சி பகுதியில் புதிதாக மாற்ற உள்ள நிலை யில் அப்பகுதியை சிலை கடத்தல் புலனாய்வு பிரிவு காவல் துறை ஏடிஜிபி சைலேஷ் குமார் யாதவ் நேரில் ஆய்வு செய் தார். கடந்த 1872 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோவை மத்திய சிறைச்சாலையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்துவிட்டு அங்கு சர்வதேச அளவிலான செம்மொழி பூங்கா அமைக் கப்படும் என அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையும் கடந்த 2010 ஆண்டு வெளியிடப்பட்டது. இதன்படி தற்போதைய முதல் வர் மு.க.ஸ்டாலின் சிறைச்சாலை மைதானத்தில் ரூபாய் 172 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமைக்க அறிவித்து அதற்கான பணிகள் துவங்கின. இந்நிலையில், கோவை மத்திய சிறைச்சாலை இட மாற்றம் செய்யப்படவுள்ள காரமடை அடுத்துள்ள பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் செவ்வாயன்று தமிழக காவல் துறை ஏடிஜிபி சைலேஷ் குமார் யாதவ் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறைச்சாலை நுழைவு பகுதி மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட உள்ள இடங் கள் குறித்து உடனிருந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற் கொண்டார். இந்த ஆய்வின் போது சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், கோவை சிறைத்துறை காவல் கண்காணிப் பாளர் செந்தில்குமார், காவல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், வடக்கு வட்டாட்சியர் மணிவேல் உள் ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.