தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் தமிழ்நாடு பாலர் பூங்கா சார்பில் மதநல்லிணக்க உறுதியேற்பு சேலம் காந்தி சிலை முன்பு புதனன்று நடைபெற்றது. இதில் மக்கள் ஒற்றுமை மேடை யின், எம்.சேதுமாதவன், எம்.பிரவீன் குமார் கே.ஜோதிலட்சுமி, முத்தவல்லி சங்கத் தலைவர் அமான், ஆர்சி பள்ளி மேலாளர் அருட்தந்தை கிரகோரி ராஜன், இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்க தர்மலிங்கம், உஸ்தம்பட்டி பள்ளிவாசல் பொருளாளர் சௌகத் அலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.