districts

img

தமிழ்நாடு பேரூராட்சி அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம், மார்ச் 15- பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி நாமக்கல் மாவட்டத்திலுள்ள 19 பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு பேரூராட்சி அலுவ லகர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அரசாணை எண் 150ன்படி கீழ் நிலை பணியாளர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பதவி உயர்வு  வழங்க வேண்டும். பேரூராட்சிகளில் நியமனக்குழு வரம்பிற்குட்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.  பேரூராட்சிகளுக்கு இணையான வரு மானம் உள்ள ஊராட்சிகளை பேரூ ராட்சிகளாக தரம் உயர்த்த வேண் டும். திடக்கழிவு மேலாண்மை திட் டத்தில் பணியாற்றி வரும் சுய உதவி குழு நபர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பேரூ ராட்சிகளில் பணிபுரியும் ஓட்டுநர்க ளுக்கு 20 ஆண்டுகள் எவ்வித விபத்து மின்றி பணியாற்றியதற்காக, அர சாணை அடிப்படையில் தங்கப் பதக் கம் வழங்க வேண்டும். அனைவருக் கும் பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். செயல் அலுவலர், இள நிலை உதவியாளர், வரி தண்டலர் ஆகியோர்களுக்கு கலந்தாய்வு அடிப் படையில் சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். நாமக்கல் மாவட்டம், ஆலாம்பா ளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு எம்.மகேஷ்வரன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐ டியு நாமக்கல் மாவட்ட தலைவர் எம்.அசோகன் சிறப்புரையாற்றினார். இதேபோன்று மாவட்டத்திலுள்ள 19 பேரூராட்சிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பேரூராட்சி ஊழியர் சங்க தலைவர் தேவராசன், செயலாளர் சரவணன், பொருளாளர் அண்ணாதுரை, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கு.ராஜேந்திர பிர சாத், செயலாளர் ஆர்.முருகேசன், துணைச்செயலாளர் ஸ்ரீதர், சிஐடியு  மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, வீ.கண்ணன், அழகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.