புதுதில்லி, பிப்.10- தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் விவகாரம் குறித்து மக்க ளவையில் விவாதிக்க மோடி அரசு அனுமதி அளிக்காததால், திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சி எம்.பி.க்கள் மக் களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 9-ஆம் தேதியோடு நிறைவடைவதாக இருந்தது. ஆனால், ராமர் கோவில் குறித்து சிறப்புத் தீர்மா னம் கொண்டுவந்து, ராமர் கோவிலைக் கட்டிய ஒட்டுமொத்த பெருமையும் பிர தமர் மோடியையும், பாஜகவையுமே சேரும் என்று ஜம்பம் அடிப்பதற்காக கூட்டத்தொடர் பிப்ரவரி 10 அன்றும் நீட்டிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில் குறித்து விவாதிக்க இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட் டது. பாஜகவானது, ராமர் கோயில் தீர் மானத்தின்போது, தனது எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் நாடாளுமன் றத்திற்கு வர வேண்டும் என்று கொறடா உத்தரவும் பிறப்பித்தது. அதன்படி ராமர் கோவிலைக் கட்டி யதற்கு ‘நன்றி தெரிவிக்கும் தீர்மானம்’ நாடாளுமன்றத்தின் இரு அவைகளி லும் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, “தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொட ர்ந்து கைது செய்யப்படுவது, படகுகள் பறிமுதல் உள்ளாவது உள்ளிட்ட விவ காரங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு கடி தம் எழுதியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், எனவே இந்த சம்ப வம் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும்” என்றும் மக்கள வையில் திமுக குழுத்தலைவர் டி.ஆர். பாலு வலியுறுத்தினார். ஆனால், ராமர் கோவில் விவகாரம் குறித்து மட்டுமே விவாதிக்க முடியும் என்று சபாநாயகர் கூறி மறுப்பு தெரி வித்ததால், தமிழ்நாட்டு மீனவர்கள் நல னில் ஒன்றிய அரசு அக்கறை செலுத்த வில்லை என குற்றம்சாட்டியும், காப் பாற்று... காப்பாற்று... தமிழக மீனவர்க ளைக் காப்பாற்று.. என்று தமிழில் முழக்கமிட்டபடியும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதே போல மாநிலங்களவையிலும் திமுக எம்.பி. திருச்சி சிவா மீனவர் விவ காரத்தை பேச வலியுறுத்தினார். அதற்கு அனுமதி வழங்கப்படாத நிலை யில் மாநிலங்களவையிலும் வெளி நடப்புப் போராட்டம் நடைபெற்றது.