districts

img

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவிற்கு சிறந்த சமூக சேவைக்கான விருது

ஈரோடு, மே 21- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவிற்கு சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் அஹ்லே தக்னி சுன்னத் ஜமாஅத் மற்றும் ஈரோடு எகனா மிக் சேம்பர் இணைந்து சமூக நல்லி ணக்க ரம்ஜான் நிகழ்ச்சி சத்தியமங்க லத்தில் ஞாயிறன்று நடைபெற்றது.  தலைவர் எஸ்.என்.நதிமுல்லாகான்  தலைமை வகித்தார். ஜமாஅத் செய லாளர் எஸ்.ஏ.அஸ்கர் அலி வரவேற் றார். ஜமாஅத்துல் உலமா சபை துணை பொதுச் செயலாளர் கே.எம். இல்யாஸ் ரியாஜி சிவநேச அடிகளார்,  சமூக விஞ்ஞானப்பள்ளி தா.சந்திரன்,  அருட்தந்தை ஏ.ரிச்சர்ட், ஜாமியா இல்மியா அறிவியல் மற்றும் ஆராய்ச்சி  கல்லூரி நிறுவனர் கலீல் அஹ்மத்  முனீரி ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாக கலந்து கொண்டனர்.  விருது தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு 2014 ஆம் ஆண்டில் திருச்சியில் தொடங்கப்பட்டது. அதே ஆண்டில் ஈரோடு மாவட்டத்திலும் அமைப்பு உரு வானது. சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க பெரும் பான்மை மக்களும் இணைந்து 2015 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவது இதன் சிறப்ப சமாகும். 2015 ஆம் ஆண்டில், ஈரோடு கோட்டாட்சியரால், பூட்டி சீல் வைக்கப் பட்டு, போலீஸ் காவலும் போடப்பட் டிருந்த ஈரோடு மாணிக்கம் பாளையம் இபிபி நகர் பள்ளிவாசலைத் திறக்க வைத்தது. அன்று முதல், நீதிக்குப் புறம் பாகச் சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட எல்லா சிறைவாசிகளையும் விடுதலை  செய்யக் கோரி தொடர்ச்சியாக மாநாடு களையும், போராட்டங்களையும் நடத்தி  வருகிறது. சிறுபான்மையினர் கல்விக் கடன், தொழில் கடன் பெற வழி காட்டும் கருத்தரங்கம் நடத்தி வரு கிறது. 

மத நல்லிணக்க நிகழ்ச்சிகளைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. குடி யுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வலிமை மிக்க போராட்டங்களை நடத் தியதுடன், தலைசிறந்த ஆளுமை களின் கட்டுரைத் தொகுப்பினை அச் சிட்டுத் தமிழ்நாடு முழுவதும் கொண்டு  சென்றது. இந்திய சுதந்திரப் போரில்  நிகரற்ற வரலாறு படைத்தவர்கள் மற்றும் நாட்டு மக்களின் முன்னேற் றத்தில் அளப்பரிய அரும்பணியாற்றிய மகத்தான தலைவர்களின் தியாக வர லாற்றை புதிய தலைமுறைக்கு எடுத்துச்  சொல்லும் வகையில் கருத்தரங்கங்கள் நடத்தி வருகிறது. கொரோனா பெருந் தொற்றுக் காலத்தில், மக்கள் மத்தியில்  பன்முகப் பணிகளைத் திறம்படச் செய்தது.  இவைகளின் காரணமாகக் காவல் துறையின் அச்சுறுத்தலையும், அடக்கு முறையையும் சந்தித்தது. அடக்கு முறையை எதிர்த்துத் தொடர்ந்த வழக் கில் செயலாளர் ப.மாரிமுத்துவிற்கு, எஸ்ஐ ராம்பிரபு 25 ஆயிரம் ரூபாய் நட்ட  ஈடு வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் தீர்ப்பளித்தது. போட்டி தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி மையம் நடத்தி, வேலை தேடும்  மாணவர்களை அரசுப் பணிக்கு அனுப் புவது போன்ற பணிகளை திறம்பட செய்து வருகிறது. இத்தகைய சிறப்பு கள் நிறைந்த அமைப்பிற்கு சிறந்த  சமூக சேவைக்கான விருது வழங்கப் பட்டது.  இந்நிகழ்ச்சியில் சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் செயலாளர் ப. மாரிமுத்து, மக்கள் ஒற்றுமை மேடை யின் அமைப்பாளர் கே.துரைராஜ், வாசவி கல்லூரி முன்னாள் முதல்வர்  ஜெயசங்கர், முனைவர் நியாசுதீன், அமைப்பின் நிர்வாகிகள் டி.சுப்பிர மணி, ஏ.பி.ராஜு உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.