தருமபுரி ஆக-22, குறுவட்ட அளவர் பதவியை மீள் தரம் உயர்த்தி வழங்க வலியுறுத்தி, தருமபுரியில், தமிழ்நாடு அரசு நிதித்துறை செய லாளரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு சார்பில் வியாழனன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இவ்வாண்டு குறுவட்ட அளவர்களாக பதவி உயர்வு பெற உள்ள நில அளவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் ஏற்கனவே நில அளவர்களாக ஒரு முறை தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீள் தரம் உயர்த்தி வழங்க வேண்டும். களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும். நில அளவை சார்ந்த அனைத்து பணிக ளையும் செய்திடும் களப்பணியாளர்களின் ஒட்டு மொத்த பணியினையும் கருத்தில் கொள்ளாமல், உட்பிரிவு பட்டா மாறுதல் பணியினை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் போக்கினை கைவிட வேண்டும்,நிலுவை மனுக்களை காரணம் காட்டி ஏற்படுத்தப்பட்டுள்ள குற்ற குறிப்பாணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும், நில அளவர் முதல் கூடுதல் இயக்குநர் வரை உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். குறுவட்ட அளவர் மற்றும் துணை ஆய்வாளர்கள் நிலம் தொடர்பான சட்ட ஒழுங்கு மற்றும் நீதிமன்ற நடைமுறைகளுக்கான பயிற்சி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரூர் கோட்ட தலைவர் சக்திவேல் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைவகித்தார். இதில், மாநிலச்செயலாளர் ரா.கல்பனா, மாவட்டச் செயலாளர் சி.பிரபு, மாவட்டப் பொருளாளர் மா. முருகன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற் றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் கே.பழணியம்மாள், மாவட்டத் தலைவர் எம்.சுருளி நாதன் ஜாக்டோ ஜியோ, நிதிகாப்பாளர் கே.புகழேந்தி ஆகி யோர் வாழத்தி பேசினர்.