உடுமலை, நவ.22- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 6 ஆவது மாவட்ட மாநாடு உடு மலை லட்சுமி திருமண மண்டபத்தில் வெள்ளி யன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மாநாடு உடுமலையில் வெள்ளி யன்று துவங்கியது. இம்மாநாட்டிற்கு மாவட் டத் தலைவர் அ.ராணி தலைமை வகித்தார். இதில், மாவட்ட துணைத்தலைவர் மதன்கு மார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். உடு மலை வட்டக்கிளை தலைவர் மார்க்கண்டன் வரவேற்றார். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாலகிருஷ் ணன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் மா.பாலசுப்பிரமணியன் வேலை அறிக்கையை முன் வைத்தார். இந்த மாநாட் டில் தேர்தல் வாக்குறுதியின் படி புதிய பென் சன் திட்டத்தை ரத்து செய்து, ஏற்கனவே நடை முறையில் இருந்த பழைய பென்சன் திட் டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர், எம்.ஆர்.பி. செவிலியர் உள்ளிட்டவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். அனைவ ருக்கும் சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 - மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி அமுல்படுத்த வேண்டும். அர சுத் துறையில் காலிப்பணியிடங்களை நிரப் பிட வேண்டும். வேலையில்லா இளைஞர் களுக்கு நிரந்தர ஊதிய முறையில் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட் டில் அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் அம்சராஜ், பரமேஸ்வரி, சிஐடியு மாவட்டத் துணைச்செயலாளர் ஜெகதீசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துரைய ரசன் ஆகியோர் வாழ்த்து பேசினர். முன்னதாக உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று மாநாடு துவங்கியது.