கோவை, டிச.15- தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்ட நிர்வாகி கள் தங்கவேல் மற்றும் திருமலைசாமி ஆகியோரது நினை வஞ்சலி கூட்டம் செஞ்சேரிமலையில் நடைபெற்றது. கோவை மாவட்டம், சூலூர் அடுத்த செஞ்சேரிமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாவட்ட நிர்வா கிகளான தங்கவேல் மற்றும் திருமலைசாமி ஆகியோரது நினைவேந்தல் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிச்சாமி, விவசாய சங்க மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோவன், சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர்கள் ஜெ.ரவிந்திரன், என்.ஆர்.ரங்கநாதன், அ.இ.விவசாய தொழி லாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் தி.ரவிச்சந்திரன், தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஸ்டா லின் பழனிச்சாமி, வாலிபர் சங்கம் தாலுகா தலைவர் ரவி தாஸ், தமிழ்நாடு விவசாய சங்கத்தைச் சேர்ந்த சி.மந்தி ரியப்பன் மற்றும் திருமலைச்சாமியின் மகன்களான உதய குமார், கோடீஸ்வரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற் றனர்.