செய்தியாளரை கட்டிப்போட்டு கொள்ளை
நாமக்கல், பிப்.14- பள்ளிபாளையம் அருகே செய்தியாளரை கட்டிப்போட்டு, வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பகுதி தினகரன் நாளிதழின் நிருபராக ரமேஷ் என்பவர் பணியாற்றி வருகி றார். இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ள னர். காடச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், தாஜ்நகர் ஸ்ரீகார்டன் பகுதியில் அவருக்கு சொந்தமான தனி வீடு உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே ரமேசின் மகள் மனைவி உள்ளிட் டோர் திருப்பத்தூர் சென்று விட்ட நிலையில், வெளி வேலை களை முடித்துக் கொண்டு வியாழனன்று ரமேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது வீட்டில் மூவர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த மூவரும், ரமேஷை அருகிலிருந்த நாற்காலி யில் கட்டிப்போட்டு, தாக்கிவிட்டு வீட்டிலிருந்த மூன்று பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில், பள்ளிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊருக்கு ஒதுக் குப்புறமாக தனியே இருக்கும் வீட்டை குறி வைத்து இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜல்லிக்கட்டு: தருமபுரி ஆட்சியர் மறுப்பு
தருமபுரி, பிப்.14- தருமபுரியில் ஜல்லிக்கட்டு விழா நடத்த யாருக்கும் அனு மதி வழங்கப்படவில்லை, என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், தருமபுரி மாவட்டம், தடங்கம் கிராமத்தில் உள்ள தனியார் கலைக்கல்லூரியின் பின்புறம் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை வழிகாட்டுதல்படி, அதியமான் ஜல்லிக்கட்டு பி.ஆர். பேரவை சார்பில், ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக உரிய வழிமுறையாக அர சாணை பெற்றும், அதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத் தின் ஒப்புதலுக்கு பின்னரே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும். தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த மாவட்ட நிர்வாகத்தால் எந்த அமைப்புக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. எந்த அமைப்பினராவது அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தினால் சட்டப் படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என தெரி விக்கப்பட்டுள்ளது.
பாலியல் புகாரை மறைத்த தலைமையாசிரியர் கைது
சேலம், பிப்.14- சேலத்தில் அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த, அப்பள்ளி மாணவர்கள் 3 பேரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். பாலியல் புகாரை மறைத்த தலைமை ஆசிரி யர் மற்றும் இரண்டு ஆசிரியரும் கைது செய் யப்பட்டனர். சேலம் மாவட்டம், மல்லியகரை பகுதி யைச் சேர்ந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ள னர். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியி னர் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலை யில், மகள்கள் தாயாரின் வீட்டிலிருந்து அப்பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி யில் படித்து வருகின்றனர். இந்நிலையில், மக ளின் வகுப்பு ஆசிரியர், ‘உங்கள் மகளுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. எனவே அழைத் துச் சென்றுவிடுங்கள்’ என அவரது தந்தையி டம் கூறியுள்ளார். இதனையடுத்து, மகளை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இது குறித்து தந்தையின் சகோதரர் 1098 என்ற உதவி எண்ணில் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் வந்த அதிகாரிகள், மாண வியை மீட்டு சேலத்திலுள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், மாணவிக்கு அப்பள்ளியில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, மாணவர்கள் 3 பேர் மீது போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் களை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறார் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர் இதன்தொடர்ச்சியாக, பாலியல் புகாரை மறைத்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற் றும் இரண்டு ஆசிரியர்களையும் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வெள் ளியன்று கைது செய்தனர்.
கடும் பனிமூட்டம்
சேலம், பிப்.14- எடப்பாடி பகுதியில் நில வும் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் சிரமத்திற் குள்ளாகியுள்ளனர். சேலம் மாவட்டம், எடப் பாடி சுற்றுவட்டார பகுதிக ளில், கடந்த சில நாட்களாக காலை 9 மணி வரை கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவ தில்லை. வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்ட படி ஊர்ந்து செல்கின்றன.விவசாய வேலைக்கு செல்ப வர்கள், பள்ளி, கல்லூரி செல் லும் மாணவ, மாணவிகள், வேலைக்காக வெளியூர் செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
196 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து
சேலம், பிப்.14- சேலம், தருமபுரி சரகத் தில் போக்குவரத்து விதிமீற லில் ஈடுபட்ட 196 பேரின் ஓட்டு நர் உரிமம் ரத்து செய்யப்பட் டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற னர். மேலும், போக்குவரத்து விதிகளை மீறுவோரின் ஓட்டு நர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு வருகி றது. அதன்படி, சேலம், தரு மபுரியில் கடந்த ஜனவரி மாதத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 25 பேர், அதிக பாரம் ஏற்றி வந்த 8 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 14 ஓட்டுநர்கள், சிக்னலை மீறி இயக்கிய 46 பேர், கைப்பேசி பேசியபடி வாகனம் ஓட் டிய 49 பேர், சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 37 பேர் உட்பட 196 ஓட்டுநர்க ளின் உரிமத்தை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலு வலர்களுக்கு போலீசார் பரிந்துரை செய்தனர். அதன் படி, 196 பேரின் ஓட்டுநர் உரி மம் 3 மாதத்துக்கு ரத்து செய் யப்பட்டுள்ளதாக போக்குவ ரத்து துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.
அம்மாபாளையம் பள்ளி மாணவர்களிடம் 1350 கிலோ பேப்பர், பிளாஸ்டிக் சேகரிப்பு
திருப்பூர், பிப்.14- திருமுருகன்பூண்டி அம்மாபாளையம் நகராட்சி நடு நிலைப்பள்ளி மற்றும் கிரீன் சைக்கிள் சொல்யூஷன் நிறுவனம் அவிநாசி கிளை சார்பில் “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டத்தின் கீழ் 2 ஆம் ஆண்டாக மறுசுழற்சி மற்றும் நிலப் பாது காப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந் தது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ் ணன் தலைமை தாங்கினார். கிரீன் சைக்கிள் சொல்யூஷன் அவிநாசி கிளை மேலாளர் ஜெபராஜ் மறுசுழற்சி மற்றும் நில பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம் குறித்து விளக்கி பேசி னார். நிகழ்ச்சியில் 5,6,7 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் 256 மாணவ, மாணவிகள் தங்கள் வீடுகளில் இருந்து 1350 கிலோ பேப்பர், நோட்டு, அட்டைப் பெட்டிகள், பிளாஸ்டிக் பொருட் களை கொண்டு வந்திருந்தனர். இதில் 23 கிலோ பேப்பர் கொண்டு வந்து முதல் இடத்தை பிடித்த 7 ஆம் வகுப்பு மாணவி ஃபஹீமா பர்வீனுக்கு கேடயம் மற்றும் மெடலும், 22 கிலோ பேப்பர் கொண்டு வந்து 2 ஆம் இடம் பிடித்த 7ஆம் வகுப்பு மாணவர் ஹனீஷ்க்கு மெடல் வழங்கி சிறப்பு செய் யப்பட்டனர். மேலும், கொண்டு வந்த பொருட்களின் மதிப்பிற் கேற்ப அவர்கள் விரும்பிய மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட் கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல் பொருட் கள் கொண்டு வந்த அனைத்து மாணவர்களுக்கும் சான்றி தழ் மற்றும் ரூ 30 ஆயிரம் மதிப்பில் அவர்கள் கொண்டு வந்த பொருட்களின் எடைக்கு ஏற்ப மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களான பென்சில், நோட்டு, விதை பேனா ஆகி யவை பரிசாக வழங்கப்பட்டன.
செம்மாண்டம்பாளையம் இடுகாட்டில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
திருப்பூர், பிப்.14- முதலிபாளையம் ஊராட்சி செம்மாண்டம்பாளையம் இடு காட்டில் மின்விளக்கு மற்றும் நீர்த்தேக்க தொட்டி அமைத்து தரும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத் துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலிபாளையம் சிட்கோ கிளைச் செயலாளர் ஏ.முகமது ஆசிக் முதலிபாளையம் ஊராட்சி தனி அலுவலருக்கு வெள்ளி யன்று, அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: முதலிபா ளையம் ஊராட்சி செம்மாண்டம்பாளையத்தில் உள்ள இடு காட்டில், செம்மாண்டம்பாளையம் மற்றும் வெள்ளக்கரடு பகுதியில் வாழும் மக்கள் காலங்காலமாக இறந்தவர்களின் சடலங்களை புதைத்து வருகின்றனர். எனினும் இங்கு முறை யான பராமரிப்பு, அடிப்படை வசதிகள் இல்லாமல் செடி கொடி கள் வளர்ந்து புல் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் இறந்தவர்களின் உடலை கொண்டு வந்து புதைப்பதற்கு சிரமமாக உள்ளது. எனவே செம்மாண்டம்பாளையம் இடுகாட்டில் மின் விளக்கு வசதி மற்றும் சடங்குகள் செய்பவர்களுக்கு தேவை யான தண்ணீர் வழங்குவதற்கு நீர்த்தேக்க தொட்டி வசதி ஆகி யவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்வ தோடு, இந்த மயானத்தை தொடர்ந்து பராமரித்து பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும் என அதில் தெரிவித்துள் ளார். இம்மனுவைப் பெற்றுக் கொண்ட தனி அலுவலர் கோரிக் கையை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ளார்.
பாலியல் புகாரை மறைத்த தலைமை ஆசிரியர் கைது
சேலம், பிப்.14- சேலத்தில் அரசுப்பள்ளி மாணவி அளித்த பாலியல் புகாரை மறைத்த தலைமை ஆசிரி யர், 2ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம், மல்லியகரை பகுதி யைச் சேர்ந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ள னர். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியி னர் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில், மகள்கள் தாயாரின் வீட்டிலிருந்து அப்பகுதி யிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், மகளின் வகுப்பு ஆசிரியர், ‘உங்கள் மகளுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. எனவே அழைத்துச் சென்றுவிடுங்கள்’ என அவரது தந்தையிடம் கூறியுள்ளார். இதுகுறித்து தந்தையின் சகோ தரர் 1098 என்ற உதவி எண்ணில் தகவல் தெரிவித்துள்ளார். விசாரணையில், மாண விக்கு அப்பள்ளியில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, மாணவர்கள் 3 பேர் மீது போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் களை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறார் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதன் தொடர்ச்சியாக, பாலியல் புகாரை மறைத்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசி ரியர்களையும் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வெள்ளியன்று கைது செய்தனர்.
விவசாயிகளை கைது செய்த காவல் துறை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்
திருப்பூர், பிப்.14- காங்கேயம் - சென்னிமலை சாலையில் நொய்யல் ஆற் றுக்கு தெற்கே பாரவலசு என்ற இடத்தில் வியாழக்கிழமை முதல் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை காவல் துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ளனர். தெரு நாய்களால் ஆடு, மாடு, கன்றுக்குட்டி, கோழிகள் என விவசாயிகளின் வளர்ப்புக் கால்நடைகள் கடித்துக் கொல்லப்படுவது தொடர் கதையாக உள்ளது. இப்பிரச்ச னைக்குத் தீர்வு காணவும், இழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி, காங்கேயம் வேலுச்சாமி, தேவராஜ், செல்வராஜ் மற்றும் பெருந்துறை மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் ஆர்.அர்ச்சுனன், விவ சாய சங்க பெருந்துறை தாலுகா செயலாளர் முத்துப்பழனிச் சாமி, சென்னிமலை ரவி, மயில்சாமி, சரவணன் ஆகி யோர் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அத்துடன் விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்று இழப்பீடு வழங்க வேண்டும், தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்நிலையில் பல கட்டக் கோரிக்கைகள், போராட்டங் கள் நடத்தியும் அரசு தீர்வு காணவில்லை. எனவே அமைதி யான முறையில் போராட்டம் தொடரும் என்று, போராட் டத்தை கைவிட விவசாயிகள் மறுத்துவிட்டனர். இதைய டுத்து காவல் துறையினர் விவசாயிகளைக் கைது செய்வதாக கூறினர். வலுக்கட்டாயமாக விவசாயிகளை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். பெண் விவசாயிகளையும் பெண் காவலர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றனர். காவல் துறையின் நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரி வித்தனர். காவல் துறை அராஜகம் ஒழிக என்று கண்டன முழக்கம் எழுப்பினர். விவசாயிகளைக் கைது செய்ததுடன் அவர்கள் அமர்ந்தி ருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளைத் தூக்கி வீசியதுடன், அமர்ந்திருந்த விரிப்புகளை அப்புறப்படுத்தினர். காவல் துறையின் அராஜக நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஆர்.குமார், காவல் துறை விவசாயிகளைக் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கைது செய்யப் பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். விவசாயிகளை வலுக்கட்டாயமாக கைது செய்தா லும் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் கூறி யுள்ளனர்.
பட்டாசு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
நாமக்கல், பிப்.14- ராசிபுரம் அருகே பட்டாசு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள வடுகம் பகுதியைச் சேர்ந்தவர் நந்த குமார் (37). லாரி ஓட்டுநரான இவர், சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் இருந்து ஜார் கண்ட் மாநிலத்திற்கு டாரஸ் லாரியில் பட்டாசு லோடு ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். நாமக்கல் - சேலம் செல்லும் தேசிய நெடுஞ் சாலையில், மூணுசாவடி அருகே வியாழ னன்று சென்று கொண்டிருந்த லாரி, நந்த குமாரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையி லேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பட்டாசுகள் தீப்பிடிக்காததால் எந்த விபரீதமும் ஏற்படவில்லை. இவ்விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நந்தகுமார் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். பட்டாசு தீ பிடிக்காமல் இருக்க தீயணைப்புத் துறையினர், மாற்று லாரி வரவழைத்து பாதுகாப்புடன் பட்டாசு பெட்டிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இவ்விபத்து குறித்து புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கோமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.