தருமபுரி, பிப்.16- மின்வாரியத்தில் உள்ள ஒப்பந்த தொழி லாளர்களை பணி நிரந்தர செய்ய கோரி சிஐ டியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் பல்வேறு இடங்களில் சாலை மறி யல் போராட்டம் நடைபெற்றது. இதில், நூற் றுக்கணக்கானோர் கைதாகினர். தானே, வர்தா, கஜா, ஒக்கி புயல் பாதிப்பு களின் போது இரவு, பகலாக பணிபுரிந்து மின் சார வாரியத்தை தலை நிமிர வைத்த ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசும், வாரிய மும் அறிவித்தபடி தினக்கூலி ரூ.380யை அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கி உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கே2 மற்றும் சிட் அக்ரிமெண்டில் பல ஆண்டு காலம் பணி செய்த ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு காலியாக உள்ள பணியிடங்களில் பணி நிய மனம் செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும்.
பணி சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட் டம் நடைபெற்றது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் பி.ஜீவா தலைமையில் நடைபெற்ற போராட் டத்தில், மாவட்ட செயலாளர் தி.லெனின் மகேந் திரன், பொருளாளர் சீனிவாசன் உள்ளிட் டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரை யாற்றினர். இதில், சிஐடியு மாவட்ட பொருளா ளர் எஸ்.சண்முகம், மாவட்ட துணைத்தலை வர் சி.அங்கம்மாள், அரசு போக்குவரத்து கழக மண்டல செயலாளர் சி.முரளி, பொருளா ளர் முருகன் ஆகியோர் வாழ்த்தி உரையாற் றினர். முன்னதாக, மறியல் போராட்டத்தில் ஈடு பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். கோவை இதேபோன்று கோவை சிவானந்த காலனி தலைமை மின்வாரிய அலுவலகம் முன்பு சிஐ டியு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் ஊழியர் மத்திய அமைப்பின் வடக்கு கிளை செயலாளர் எம்.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சங்கத்தின் மாநி லச் செயலாளர் தி.மணிகண்டன், தெற்கு கிளை செயலாளர் ரத்தினகுமார், தலைவர் காளிமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் தி.பழனிச்சாமி உள்ளிட்ட 100க்கும் மேற்பட் டோர் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.