districts

img

செயலாக்கம் இல்லாத செட்டாப் பாக்சுக்கு பணம் வசூலிப்பதா?

சேலம், டிச.12- அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் கேபிள்  ஆபரேட்டர்களிடம் இருந்து அனலாக் நிலு வைத் தொகையை வசூலிக்க கட்டாயப்படுத் துவதும் செயலாக்கம் இல்லாத செட்டாப் பாக்ஸ்களுக்கு பணம் கேட்டு நிர்பந்தம் செய்வதை கைவிட வேண்டும் என வலியு றுத்தி தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட் டர்கள் திங்களன்று கோவை, சேலம் மாவட் டத்தில் ஆட்சியரை சந்தித்து புகார் அளித்தனர். இதுகுறித்து, இச்சங்கத்தின் தலை வர்கள் கூறுகையில், அரசு கேபிள் டிவி ஒளிப ரப்பு வழங்கப்பட்ட நாள் முதல் தரமான ஒளிப ரப்பு சரியாக வந்ததில்லை. இதனால் கடை கோடி கிராமப்புற ஆப்ரேட்டர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அரசு நிறுவ னம் சார்பில் மக்களுக்கு ஒளிபரப்பை கொண்டு செல்ல எந்தவித உபவணங்களும் வழங்கப்படவில்லை. மாறாக உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் முதலீடு செய்து தேவையான உபகங்களை வாங்கி பயன்ப டுத்தி பொதுமக்களின் அரசு கேபிள் ஒளிப ரப்பு செய்து வருகின்றனர். இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழகம் முழுவதும் டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அனலாக் முறை இருந்தபோது அரசு சரியாக ஒளிபரப்பை வழங்காத காரணத்தினாலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் ஈர்க்கப் படும் வாடிக்கையாளர்கள் தனியார் சேவை யை நோக்கி நகர ஆரம்பித்து உள்ளனர். இதனால் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். இந்நி லையில், 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அனலாக் முறை நிறுத்தப்பட்டு டிஜிட்டல் முறை துவக்கப்பட்ட பிறகு தற்போது அன்லாக் முறை ஒளிபரப்புக்கு நிலுவை உள்ளதாக கூறி காவல் துறை மற்றும் வருவாய் துறை மூலமாக பணம் வசூலிக் கின்றனர். எந்த வித உபகரணங்களும் எங்க ளுக்கு வழங்காமல் இருந்த போதும் அரசு  கேபிள் டிவி பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி தந்த எங்களை இப்படி இழிவு படுத்துவதாக குற்றம்சாட்டினர்.   மேலும், அரசு கேபிள் டிவியில் பதிவு  செய்த பல்லாயிரக்கணக்கான ஆப்ரேட்டர் கள் ஒளிபரப்பு வழங்காமலே நிலுவை தொகை உள்ளதாக கூறி, தற்போது நோட் டீஸ் வழங்கப்பட்டு பல ஆண்டுகள் கழித்து அரசு இயந்திரத்தை பயன்படுத்தி துன்புறுத் தப்படுகின்றனர். எனவே அரசின் இந்த போக்கை கைவிட வேண்டும் என்று சேலம்  மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு கேபிள் டீவி ஆப்ரேட்டர்கள் சங்கத்தினர் மனு அளித்த னர்.  கோவை இதேபோன்று கோவை மாவட்ட ஆட்சி யரிடம் தமிழக கேபிள் டிவி ஆபரட்டர்கள் பொது நல சங்கத்தினர் மனு அளித்தனர். இச்சங்கத்தின்  மாவட்ட செயலாளர் ஏ.சிவக்குமார் தலைமையில், நிர்வாகி கள்,என். ஜாகீர் மற்றும் நிர்வாகிகள் ஏ.ஷாஜகான், பி.சிவக்குமார், தினேஷ், என். முருகேசன், சந்திரன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.