districts

img

தரமான கல்வி அளிக்கும் தமிழக, கேரள மாநில அரசுகளை பாதுகாக்க வேண்டும்: பி.ஆர்.நடராஜன் எம்.பி., வேண்டுகோள்

கோவை, டிச.17- பொதுக்கல்வி மூலம் தரமான  கல்வியை கொடுக்கும் தமிழ்நாடு  மற்றும் கேரள மாநில அரசுகளை  பாதுகாக்க வேண்டும் என கோவை  நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வேண்டுகோள் விடுத் தார். கோவை மாநகராட்சி, இடை யர்பாளையம் அருகே உள்ள அன்பு  நகர், 5 ஆவது வீதியில் நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியில் கட்டப்பட்ட பாலம்  திறப்பு விழா ஞாயிறன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு 35 ஆவது  வார்டு மாமன்ற உறுப்பினர் சம்பத்  தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட்  கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டு பாலத்தை திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். சிறுபாலம் திறக்கப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் பாலம் அமைத்திட வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கோரிக்கையாகும். பாலம் அமைந்ததன் மூலம் சில  கிலோ மீட்டர் தொலைவு சுற்றி செல்வதற்கு மாறாக எளிதாக செல்ல முடியும். எங்கள் கோரிக் கையை நிறைவேற்றித் தந்த நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜனுக்கு நன்றிகளை தெரிவித் துக் கொள்கிறோம், என்றனர். இந்நி கழ்வில், கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், திமுக மாநில தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் தமிழ்மறை, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.டி.சுப்பிரமணியன், காங்கிரஸ் கட்சி நிர்வாகி கே.ஈஸ்வரமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் வி.ராம மூர்த்தி, தமிழச்செல்வன், கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண் டனர்.

பள்ளி சுற்றுச்சுவர் திறப்பு

இதேபோன்று கோவை மாந கராட்சி, 15 ஆவது வார்டுக்குட் பட்ட கேஎன்ஜி புதூரில் உள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளி சுற்றுச் சுவர் திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. கோவை மாநக ராட்சி வடக்கு மண்டல தலைவர்  கதிர்வேல் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி  மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.27  லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட் டுள்ள சுற்றுச்சுவர் மற்றும் கல் வெட்டை பி.ஆர்.நடராஜன் எம்.பி.,  திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், கல்விக்காக வும், உணவுக்காகவும் தமிழ்நாட் டில் மாநில அரசு அதிகப்படியான தொகையை செலவு செய்கிறது. சமூக பாதுகாப்புக்காக செலவி டப்படும் இந்த தொகை மக்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. பொருளா தார ரீதியாகவும் அவை முக்கியத்து வம் வாய்ந்தது. பொதுக்கல்வி மற்றும் பொது விநியோக முறை ஆகியவற்றை பலப்படுத்தி பாது காப்பதன் மூலம் அனைத்து தரப்பி னரும் பலனடைவார்கள். சந்தை யில் உணவுப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்த, பொது  விநியோக முறை உதவி செய்கி றது. தரமான கல்வியை பொதுக் கல்வி மூலம் தருவதை தமிழ்நாடு,  கேரளா போன்ற மாநிலங்கள் செய்து வருகின்றன. இத்தகைய மாநில அரசுகளை நாம் பாதுகாக்க  வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சி யில் மாமன்ற உறுப்பினர்கள் வி.ராமமூர்த்தி, சாந்தாமணி பச்சைமுத்து, சித்ரா தங்கவேலு,  சிபிஎம் பெரியநாயக்கன்பாளை யம் ஒன்றியச் செயலாளர் மோகன் ராஜ், சிஐடியு இன்ஜினியரிங் சங்க  பொதுச்செயலாளர் துரைசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் விஜய ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.