districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு

ஈரோடு, டிச. 27- சத்தியமங்கலம் அருகே 2 பேர் பயின்று வந்த அரசு பள்ளியில் மாணவர் எண்ணிக்கை உயர்ந்ததால் புதிய வகுப்பறை கட்டடம் கட்டி திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டத்திற்குட்பட்டது செண்பகப்புதூர். இந்த ஊராட்சிக்குட்பட்டது நடுப்பா ளையம் கிராமம். இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு இப்பள் ளியில் 2 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். பள்ளி மேலாண் மைக்குழு மற்றும் சுடர் அமைப்பின் முயற்சியால் பொது மக்கள் தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்தனர். மாணவர்கள் வருகை 94 ஆக உயர்ந்த நிலையில் வகுப் பறை போதுமானதாக இல்லை. இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இரண்டு வகுப்ப றைகள் கொண்ட கட்டடம் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட் டது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்டக் கல்வி  அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சேலம்: தனியார் கல்லூரி பேராசிரியை மீது தாக்குதல்

சேலம், டிச.27- சேலம் அருகே தனியார் கல்லூரி பேராசிரியையை சர மாரி தாக்கிய கணவர் உள்ளிட்ட 4 பேர் மீது பெண்களுக்கு  எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக் குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரியேரிப் பட்டி தாண்டானூர் வேடப்பட்டியைச் சேர்ந்தவர் வினோத்(36). தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணி யாற்றி வருகிறார். இவரது மனைவி சுகன்யா (32). இவர்க ளுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 6 வயதில் மகன்  உள்ளார். சுகன்யா, மேச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி யில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவரது  கணவருடன் வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது.  இந்நிலையில், சுகன்யா வீட்டில் இருந்தபோது, அவரது  கணவர் வினோத், அவரது அண்ணன் கிருஷ்ணமூர்த்தி, மாம னார் தனபால், மாமியார் விஜயராணி ஆகியோர் தகராறில்  ஈடுபட்டுள்ளனர். அப்போது, சுகன்யாவை 4 பேரும் சேர்ந்து  சரமாரி தாக்கி, வீட்டில் இருந்து வெளியே தள்ளியுள்ளனர். இதில், படுகாயமடைந்த சுகன்யா சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகு றித்து தகவலறிந்த தொளசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, பேராசிரியை சுகன்யாவை தாக்கிய அவரது கணவர்  வினோத், மைத்துனர் கிருஷ்ணமூர்த்தி, மாமனார் தனபால்,  மாமியார் விஜயராணி ஆகிய 4 பேர் மீதும் தாக்கியது, கொலை  மிரட்டல் விடுத்தது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த னர். தொடர்ந்து அந்த 4 பேரையும் கைது செய்ய போலீ சார் தேடி வருகின்றனர்.

வேளாண் குறைதீர் கூட்டம்

ஈரோடு, டிச. 27- ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் மாதத்திற்கான வேளாண்  குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வெள்ளியன்று நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10மணி முதல் 11.30 வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி  வரை விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயம் தொடர் பான தங்களது பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கலாம். பகல் 12.30 முதல் 1.30 முடிய அலுவலர் களின் விளக்கங்கள் தெரிவிக்கப்படவுள்ளது. இக்கூட் டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அழைப்பு  விடுத்துள்ளார்.

ரூ58.40 லட்சத்தில் புதிய இலகு ரக வாகனங்கள்

மே.பாளையம், டிச. 27- மேட்டுப்பாளையம் நகராட்சியில் குப்பை மேலாண்மைக்காக ரூ58.40 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய் யப்பட்ட புதிய இலகு ரக வாகனங் களை, மக்கள் பயன்பாட்டிற்காக ஆ.ராசா எம்பி., கொடி அசைத்து துவக்கி வைத்தார். கோவை, மேட்டுப்பாளையம் நக ராட்சியில் கடந்த இரண்டு மாதங்க ளுக்கு முன்பு தனியார் குப்பை அள் ளும் ஒப்பந்தம் ரத்து செய்யபட்டது. தற்போது நேரடியாக நகராட்சி நிர்வா கம் மேற்பார்வையில் நகர பகுதியில் குப்பைகள் அள்ளும் மேலாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, அதற்கு தேவையான எட்டு இலகு ரக வாகனங்கள் ரூ58.40 மதிப்பீட்டில் புதிதாக வாங்கப்பட்டது. இந்த புதிய வாகனங்கள் நகராட்சி பகுதியில் உள்ள குப்பைகளை சேக ரம் செய்யவுள்ளது. இந்த எட்டு புதிய  இலகு ரக வாகனமும் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. நகராட்சி அலுவலகத்தில் புத னன்று நடைபெற்ற நிகழ்விற்கு மேட்டுப் பாளையம் நகராட்சி  தலைவர் மெஹ ரீபா பர்வீன் தலைமை ஏற்றார். இந்நி கழ்வில், நீலகிரி நாடாளுமன்ற உறுப் பினர் ஆ.ராசா கலந்து கொண்டு வாக னங்களை மக்கள் பயன்பாட்டிற்காக கொடி அசைத்து துவங்கி வைத்தார். இந்த வாகனங்கள் மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 4  வார்டுகளுக்கு தலா 1 வாகனம் என  பிரிக்கப்பட்டு குப்பை மேலாண்மைக் காக பயண்படுத்தபட உள்ளதாக நக ராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பழங்குடியின மாணவர்கள் மீது தாக்குதல் உயர்மட்ட விசாரணை நடத்த வலியுறுத்தல்

சேலம், டிச.27- பழங்குடியின மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய  கொடூர தாக்குதல் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை  நடத்த வேண்டும் என வலியுறுத்தி மலைக்குறவன் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்ற சங்கத்தினர் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள இலுப்ப நத்தம் மலைக்குறவன் பழங்குடியின மாணவர்களை விசாரணை என்ற பெயரில் வீரகனூர் காவல் நிலையத்தில் கொடூரமாக தாக்கி காலணியால் மிதித்து சித்திரவதை செய்த  காவலர்கள் மைக்கேல் ஆரோக்கியராஜ், சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட  மலைக்குறவன் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்ற சங்கத்தினர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முக ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராமமூர்த்தி, எம்.குணசேகரன், ஏ.முருகேசன், மலைக்குறவன் கல்வி மற்றும்  பொருளாதார முன்னேற்ற சங்க மாவட்டச் செயலாளர் தன பால் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடனிருந்தனர்.

சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை பலி: 2 பேர் கைது

உதகை, டிச.27- உதகையில் தனியார் விவசாய தோட்டத்தில் இருந்த  சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை உயிரிழந்த சம்பவத் தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வனப்பகுதியை அதிகம் கொண்ட நீலகிரி மாவட்டத் தில் காட்டு யானை, காட்டெருமை, கரடி, சிறுத்தை மற்றும்  பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இதனால், அவ்வப்போது உணவைத் தேடி வனவிலங்குகள் ஊருக் குள் வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி  தீட்டுக்கல்லில் உள்ள கால்நடை துறைக்கு சொந்தமான பண்ணை அருகே, விவசாய தனியார் தோட்டத்தில் உள்ள  முள்வேலியில் சுருக்கு கம்பியில் சிறுத்தை ஒன்று சிக்கியி ருந்தது.  இதையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நீலகிரி மாவட்ட வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்து றையினர் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி மீட்ட னர். பின்னர், கூண்டில் அடைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப் பட்டது. இதனைத்தொடர்ந்து, சிறுத்தையை வனப்பகுதி யில் விட முயற்சி செய்தபோது, பரிதாபமாக உயிரிழந்தது. பின்னர் சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப் பட்டு எரிக்கப்பட்டது.  இந்நிலையில், சிறுத்தை உயிரிழப்பு தொடர்பாக மாவட்ட  வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில், வனவிலங்கு பாது காப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப் பட்டது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் குமார் (26), மாரி (50) ஆகியோர் காட்டுப் பன்றியை வேட்டை யாட சுருக்கு வலை வைத்ததும், இதில் சிறுத்தை சிக்கி  இறந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறை யினர், அவர்கள் இருவரையும் கைது செய்து உதகை குற்ற வியல் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர். 

இடுவாயில் பள்ளி அறைகள்: முதல்வர்  காணொளி மூலம் திறந்து வைப்பு

திருப்பூர், டிச.27- இடுவாய் ஊராட்சியில் ரூ.41 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பீட் டில் புதிதாகக் கட்டப்பட்ட இரண்டு பள்ளி அறைகளை செவ் வாயன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம்  திறந்து வைத்தார். திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் தமிழக முதல் வரின் சிறப்பு நிதியிலிருந்து ஆரம்பப் பள்ளிக்கு ரூ.41 லட்சத்து  26 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட இரண்டு பள்ளி  அறைகளை செவ்வாயன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி  மன்ற துணைத் தலைவர் எஸ்.பரமசிவம் முன்னிலை வகித் தார். ஊராட்சி மன்றத் தலைவர் க.கணேசன் பள்ளியை திறந்து  வைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணன், பாரதி  புரம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.காளீஸ் வரி சுப்பிரமணியம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆர்.ஈஸ் வரி, பி.ஈஸ்வரி, ரமேஷ், எம்.கணேசன், ஊராட்சி செயலாளர் கள் உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டத்தை சாலை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வேண்டும்

திருப்பூர், டிச.27- திருப்பூர் மாவட்டத்தை சாலை விபத் தில்லா மாவட்டமாக மாற்ற வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் முனைப்பாக செயல்பட வேண் டும் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் புதனன்று மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் தெரி வித்தார்.  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில் சாலைப்பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித் ததாவது, திருப்பூர் மாவட்டத்தில் பொது மக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்தி, விபத்துகள் மற்றும்  உயிரிழப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர் விழிப் புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருப் பூர் மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு மற்றும்  ஸ்டார்டப் டி.என் இணைந்து தயாரிக்கப்பட் டுள்ள ”விபத்தில்லா திருப்பூர்” சாலை பாது காப்பு ஐடியத்தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டு புதுமையான தீர்வுகள் பொதுமக்கள் ளிடமிருந்து பெறப்பட்டது. இதனை செயல்ப டுத்தும் விதமாக ”விபத்தில்லா திருப்பூர்” மாவட்டத்தை உருவாக்கிட  அனைவரும் ஒரு கிணைந்து செயல்பட வேண்டும். சாலைக ளின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் வாகன ஓட்டிகள் எளிதில்  அறியும் வண்ணம் வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தை சாலை விபத்தில்லா மாவட்ட மாக மாற்ற வட்டார போக்குவரத்து அலுவலர் கள்  மற்றும் காவல்துறை அலுவலர்கள் முனைப்பாக செயல்பட வேண்டும். பொது மக்களுக்கு போதிய வழிப்புணர்வு ஏற்படுத்த  வேண்டும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பெ.சாமிநாதன், மாவட்ட வரு வாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், மாநகர  துணை காவல் ஆணையர் வனிதா, மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், வட்டார போக்குவரத்து அலு வலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர் கள் பலர் கலந்து கொண்டனர்.

விலை சரிவால் காப்பி விவசாயிகள் கவலை

நாமக்கல், டிச.27- கொல்லிமலையில் காப்பி கொட்டை விளைச்சல் அதிக ரித்துள்ள போதிலும், மார்க்கெட்டில் விலை குறைந்துள்ள தால், காப்பி பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலையடைந் துள்ளனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டாரத்தில் அரி யூர் நாடு, வாழவந்தி நாடு, திண்ணனூர் நாடு, சேலூர் நாடு, வளப்பூர் நாடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்க ரில், விவசாயிகள் மிளகு தோட்டத்தில் ஊடுபயிராக காப்பி  செடிகளை பயிரிட்டுள்ளனர். நடவு செய்த 3 ஆண்டுகளுக்கு பிறகு, காப்பி செடிகளில் மகசூல் வரத்தொடங்கும். கொல்லி மலையில் உள்ள காலநிலைக்கு, இங்கு விளையும் காப்பி  கொட்டைக்கு அதிக வாசனை தன்மை உள்ளதால், பிரேசில், ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய வெளி நாடு களுக்கும் மற்றும் வெளி மாநிலங்களுக்கு வியாபாரிகள் மூலம், இங்கு விளையும் காப்பி கொட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொல்லிமலையில் காப்பி கொட்டை அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந் தாண்டு ஒரு கிலோ காபி கொட்டை ரூ.350க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது காப்பி கொட்டையின் விளைச் சல் அதிகரித்துள்ளதால், அதன் விலை குறைந்து இந்தாண்டு கிலோ ரூ.230க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் விவ சாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அரசு கல்லூரி மாணவர் விடுதி திறப்பு

தருமபுரி, டிச.27- தருமபுரியில் ரூ.6.46 கோடியில் கட்டப்பட்ட அரசு கல்லூரி  மாணவர்கள் விடுதியினை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், காணொளி மூலம் திறந்து வைத்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தருமபுரி மாவட்டத்தில் ரூ.6.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு கல்லூரி மாணவர் விடுதியை தமிழ்நாடு  முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத் தார். இதனைத்தொடர்ந்து தருமபுரி, ஏ.ஜெட்டி அள்ளியில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதி கட்டடத்தினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி குத்துவிளக்கு ஏற்றி வைத்து, பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், சட்டமன்ற உறுப் பினர்கள் ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன், முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, முன் னாள் அமைச்சர் பழனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

தமிழ் ஆட்சி மொழி சட்டவாரம் கல்லூரி மாணவர்கள் பேரணி!

கோவை, டிச.27- தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரத்தை முன்னிட்டு கோவை யில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் கடந்த டிச.18ஆம் தேதி  முதல் டிச.27 வரை கடைபிடிக்கப்பட்டது. கோவை மாவட்டத் தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தொடர்ந்து பல்வேறு பள்ளி  கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சி யாக, புதனன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து டவுன் ஹால் பகுதி வரை இந்த பேரணி நடைபெற்றது. இதனை  மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கொடி அசைத்து  துவக்கி வைத்தார். இதில் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர் கள் உட்பட 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக  சென்றனர். முன்னதாக, மாணவ, மாணவிகள் அவர்களது முகத் தில் “தமிழ்” என்ற வார்த்தையையும் பாரதியார் படத்தையும்  வரைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழ்பவானி தண்ணீர் கடைமடைக்கு போய்ச் சேர வேண்டும்

ஈரோடு, டிச.27- கீழ்பவானி வாய்க்காலில் இருந்து கடை மடைக்கு தண்ணீர் போய்ச் சேர வேண்டும். தண்ணீர்  வீணாகக்கூடாது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணி கள் மேற்கொள்வது பற்றிய விவசாய பிரதி நிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட  அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆறு,  வாய்க்கால், குளம் உள்ளிட்ட எல்லா நீர் நிலைகளையும் சரி செய்ய வேண்டுமென முதலமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார். கீழ் பவானி வாய்க்காலைப் பொறுத்தவரை, ஏற் கனவே இந்த பிரச்சனை நீண்ட நாட்களாக  நிலுவையில் உள்ளது. எனவே இந்த நேரத் தில் ஒரு சரியான முடிவை எடுக்க வேண் டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். கான் கிரீட் தளம், சுவர் அமைக்க வேண்டும் எனவும், அவை வேண்டாம் என்றும் விவசாயிகளிடம் மாறுபட்ட கருத்து இருக்கிறது.  இப்பொழுது கான்கிரீட் போடக்கூடாது என்னும் விவசாயிகளை அழைத்துப் பேசி னோம். எந்த இடத்தில் பாதிப்புகள் ஏற்படு கிறது. பழைய கட்டுமானத்தைப் பற்றி, அடிக் கடி உடைப்பு ஏற்படுகிற இடம், வாய்க்கால் மேலே இருக்கும், ஊர் கீழே இருக்கும், அதி கமான தண்ணீர் வந்து விவசாயம் செய்ய  முடியாமல் பாதிக்கும் இடம் குறித்து கேட்ட றிந்தோம். அதற்காக 10 பேர் கொண்ட குழுவை அமைத்து 10 நாட்களுக்குள்ளாக பட்டிய லைக் கொடுங்கள் என கூறியுள்ளோம். அதை  வைத்து தண்ணீர் வரவில்லை என்பவர்களை யும், கான்கிரீட் போட வேண்டும் என்பவர் களையும் அழைத்துப் பேசி சுமூகமான முடிவை ஏற்படுத்தி நடவடிக்கை எடுப்பதற் காகத் தான் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டது. இதன் நோக்கம் கடைமடைக்கு தண் ணீர் போய்ச் சேர வேண்டும். தண்ணீர் வீணா கப்போகக்கூடாது என்பது அரசின் கடமை, என்றார்.