districts

img

சிபிஎம் சார்பில் தமிழ் வளர்ச்சி கருத்தரங்கம்

கோவை, நவ.1- மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்ட தினத்தை தமிழ்நாடு அமைப்பு தின மாக மார்க்சிஸ்ட் கட்சி மாநி லம் முழுவதும் கொண்டாடி வருகிறது. தமிழ்நாடு அமைப்பு தினத்தை அரசு கொண்டாட வேண்டும், தாய் மொழிக்கல்வியை அனைத்து நிலைகளிலும் உறுதி செய்ய வேண்டும் என்கிற கோரிக் கையை முன்வைத்து மாநி லம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழ் வளர்ச்சி கருத் தரங்கங்களை நடத்தி வரு கிறது.  இதன்ஒருபகுதியாக கோவை, வரதராஜபுரம் சர்க்கரை செட்டியார் திரு மண மண்டபத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழுவின் சார்பில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கிற்கு சிபிஎம் சிங்கை நகரச்செயலாளர் வி. தெய்வேந்திரன் தலைமை  ஏற்றார். சிபிஎம் பீளமேடு நகரச் செயலாளர் கே.பாண்டியன் வரவேற்றார். இதில், மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன் பங்கேற்று தமிழ் மொழி வளர்ச்சியில் கம்யூனிஸ்ட்டுகளின் அளப்ப ரிய பங்களிப்பு குறித்து சிறப்புரையாற்றி னார். இந்நிகழ்வில் கட்சியின்  மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் யு.கே.சிவஞானம், வி. சுரேஷ், கே.அஜய்குமார், மாவட்டக்குழு உறுப் பினர் தி.மணி, ஜோதிமணி, ஆர்.மூர்த்தி உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடிவில் சிங்கை நகரக்குழு உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.  சேலம் தமிழ்நாடு அமைப்பு தின சிறப்பு கருத் தரங்கம் சேலம் சிறை தியாகிகள் நினைவகத் தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் மேவை. சண்முகராஜா தலைமை ஏற்றார். இதில் தமிழ் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகள் பங்கு குறித்து சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி, தமிழின் தொன்மையும் சிறப்பும் என்ற தலைப்பில் மேட்டூர் தமிழ் சங்க செயலா ளர் கு. பாரி, கவிதை தமிழ்த் தேன் என்னும் தலைப்பில் தமுஎகசவின் நிர்வாகி ஐ.க. நாகப்பன் ஆகியோர் உரையாற்றினர்.  ஈரோடு  ஈரோட்டில் தமிழ் வளர்ச்சி கருத்தரங்கம் வி.பி.சிந்தன் நினைவகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஈரோடு நகரச் செயலாளர் சுந்தரரா ஜன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பி னர் ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.விஜ யராகவன், எஸ்.சுப்ரமணியன், மாவட்டக்குழு  உறுப்பினர் எம்.ஸ்ரீராம், நகரக்குழு உறுப்பி னர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.