ராணிப்பேட்டை, நவ. 2- தமிழ்நாடு அமைப்பு தினமான நவம்பர் 1 அன்று இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஒன்றிய ஆட்சி மொழியாக அங்கீகரிக்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தாலுகா செய லாளர் எஸ்.செல்வம் தலைமை யில் ஆற்காட்டில் தமிழ் வளர்ச்சி கருத்தரங்கம் செவ்வாயன்று (நவ. 2) நடைபெற்றது. இந்தி திணிப்பை ஏன் எதிர்க்க வேண்டும், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் “தமிழே ஆட்சி மொழியாக இருக்க கம்யூ னிஸ்டுகளின் பங்களிப்பு” என்ற தலைப்பில் சிலம்பரசன் பேசி னார். இதில் மாவட்ட அமைப்பாளர் என்.காசிநாதன், மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர்கள் டி.சந்திரன், பி.ரகுபதி, எஸ்.கிட்டு, அ.தவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமையில் கடலூர் நடை பெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாவட்டச் செயலாளர் கோ.மாத வன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், வி.உதய குமார், வி.சுப்புராயன், ஜே.ராஜேஷ் கண்ணன் ஆகி யோர் பேசினர். இதில் கடலூர் ஒன்றியச் செய லாளர் பஞ்சாட்சரம், சிப்காட் செயலாளர் சிவானந்தம், போக்கு வரத்து அரங்க கன்வீனர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கிரான் வரவேற்றார். மாநகர குழு உறுப்பினர் ஏ.பாபு நன்றி கூறினார்.