districts

img

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகை, ஜன.1- புத்தாண்டு விடுமுறையை யொட்டி உதகையில் சுற்றுலாப் பய ணிகள் குவிந்தனர்.  கிறிஸ்துமஸ் பண்டிகை, புத் தாண்டு தினத்தை ஒட்டி பள்ளி களுக்கு விடுமுறை விடப்பட்டதால் கடந்த ஒரு வாரமாக நீல கிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பய ணிகள் படையெடுத்து வந்தனர்.  புத்தாண்டை கொண்டாடுவதற் காகவும், சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்கவும் கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங் கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு  மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப்  பயணிகள் உதகையில் குவிந்து உள்ளனர். இந்நிலையில், சுற் றுலா நகரமான உதகையில் உள்ள  அரசு தாவரவியல் பூங்காவில் புத னன்று சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட் டது. அங்குள்ள கண்ணாடி மாளி கையில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த பல வண்ண மலர்களை கண்டு ரசித்ததோடு, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். புல்வெளி மைதானத்தில் அனுமதி மறுக்கப் பட்டதால் இத்தாலியன் பூங்கா பகு தியில் அதிக அளவு கூடினர். மேலும், அலங்கார செடிகள் முன்பு  நின்று செல்பி எடுத்து கொண்ட னர்.  இதேபோல் படகு இல்லத்தி லும் சுற்றுலாப் பயணிகள் குவிந்த னர். அங்குள்ள பூங்காவில் சுற்று லாப் பயணிகள் ஏரியின் பின்னணி யில் புகைப்படம் எடுத்தனர். மிதி  படகு, துடுப்புப் படகு, மோட்டார்  படகுகளில் இதமான காலநி லையை அனுபவித்தபடி சவாரி செய்து மகிழ்ந்தனர். ரோஜா பூங்கா வில் பூத்துக்குலுங்கிய பல வண்ண  மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். புல்வெளியில் அமர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். இதேபோல் பைன்  பாரஸ்ட், தொட்டபெட்டா மலைச்சி கரம், சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற் றுலாத் தலங்களிலும் சுற்றுலாப் பய ணிகள் வருகை அதிகரித்து இருந் தது. உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மட்டும் அனுமதி இந்நிலையில், ஆங்கில புத் தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ள நிலையில், கோவை  மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடு பட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையத்ததிலிருந்து கோத்தகிரி வழியாக உதகை செல் லும் சாலையில் போலீசார் மற்றும்  வனத்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தீவிர சோதனைக்குப் பின்பே மலைப்பாதையில் பயணிக்க அனு மதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப் பாக நீலகிரி மாவட்டப் பயணிக ளுக்கு மட்டுமே போலீசார் மலைப் பாதையில் பயணிக்க அனுமதித்து  வருகின்றனர். வெளி மாவட்டங்க ளைச் சேர்ந்த பயணிகளை தடுத்து  திருப்பி அனுப்பினர்.