districts

img

10 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கவில்லை: தையல் கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருப்பூர், ஜூலை 13- தையல் கூட்டுறவு சங்க பெண்க ளுக்கு பத்தாண்டுகளாக வழங்கப்படா மல் உள்ள கூலி வியர்வை உடனடியாக  வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் சனி யன்று மனு அளிக்கப்பட்டுள்ளது. பல்லடம் தையல் சங்க உறுப்பினர் கள் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜி டம் சனியன்று அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது, அரசு பள்ளி மாணவ,  மாணவிகளுக்கு சீருடை தைக்கும் பணி தையல் கூட்டுறவு சங்க பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை ஐந்து சதவீதம் கூலி உயர்வு  வழங்க வேண்டும். ஆனால் 10 ஆண்டு களாக கூலி உயர்வு வழங்கப்பட வில்லை. மேலும், சென்ற ஆண்டு ஆதி திராவிடர் பள்ளிகளுக்கு தைத்துக் கொடுத்த சீருடைகளுக்கு கூலி வழங் கப்படாமல் உள்ளது. ஏற்கனவே சொற்ப கூலியே வழங்கி வரும் நிலை யில், செய்து முடித்த வேலைக்கும் கூலி  வழங்கப்படாமல் உள்ளது. எனவே முறையாக கூலி உயர்வு வழங்கவும், முடிக்கப்பட்ட பணிகளுக்கு கூலி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அத்துடன், கேன்வாஷ் மற்றும் லேபிள்க ளுக்கு கூலியில் பிடிக்காமல் அரசே  ஏற்க வேண்டும் என்ன குறிப்பிட்டுள் ளது. இந்நிகழ்வில், சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியச் செயலாளர் பரமசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.