ஆள் பாதி, ஆடை பாதி என்று பழமொழி உண்டு. ஆடை உற் பத்தி பணியை அதிகம் மேற்கொள் ளும் இடமாக நாமக்கல் மாவட்டம் உள்ளது. குறிப்பாக நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையத்தில் அதி களவு விசைத்தறிக்கூடங்கள் உள்ளது. ஜவுளி உற்பத்தியும் அதிகம் நடை பெறக்கூடிய பகுதியாக உள்ளது. விசைத்தறி, ஜவுளிகளுக்கு அடுத்து அதிகமாக தையல் தொழில் இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது. தற்போது மாறிவரும் சூழல் காரணமாக, தையல் தொழில் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறது. இதுகுறித்து பள்ளிபாளையம் பகுதியில் தையல் கடை உரிமையாளர் சேகர் கூறிய தாவது, கடந்த 15 ஆண்டுகளாக சொந்த மாக தையல் தொழிலில் ஈடுபட்டுள் ளேன். பள்ளிபாளையத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தையல் தொழில் கோலோச்சியது. அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் ஜவுளி ஏற்றுமதி மற்றும் உற்பத்தி அதிகம் நடைபெறக்கூடிய பகுதி களாகும். அதுபோலவே பள்ளி பாளையம் பகுதியிலும், பரபரப் புடன் ஜவுளி உற்பத்தி மற்றும் கார் மெண்ட்ஸ், தையல் தொழில் இருந்து வந்தது. தற்போது நிலைமை தலை கீழாக மாறிவிட்டது.
தற்போது பெரும்பாலானோர் தையல் கடையில் துணிகளை ஆர்டர் கொடுக்க வருவதில்லை. முன் பெல்லாம் தீபாவளி, பொங்கல் பண்டி கையின் போது, ஒவ்வொரு உள்ளூர் விசேசங்களின் போதும் வாடிக்கையா ளர்கள் தையல் கடைக்கு துணிகளை கொண்டு வந்து கொடுப்பார்கள். பண்டி கைக்கு ஒரு நாள் இருக்கும் போது கொண்டு வந்து துணிகளை கொடுத்து தைத்து தர சொல்வார்கள். நாங்கள் அதிகளவு துணிகளை வாங்கி வைத் திருக்கும் காரணத்தால், அவர்களுக்கு துணிகளை தைத்துக் கொடுக்க முடி யாத நிலை ஏற்படும். இதன் காரண மாக உரிமையுடன் வாடிக்கையா ளர்கள் எங்களுக்கு தைத்துக் கொடுத் தே ஆக வேண்டும் என சண்டையிட்டு, துணிகளை வலு கட்டாயமாக கொடுத்து தைக்க சொல்லி, விசேச பண்டிகை நாளின் அதிகாலை வரை தையல் கடையிலே நின்று ஆடைகளாக வாங்கிச் சென்றனர். அப்போதெல்லாம் எங்கள் தொழில் சிறப்பாக இருந்தது. தற்போது ரெடிமேட் துணிகள் அதி களவு பொதுமக்கள் மற்றும் வாடிக் கையாளர்கள் ஈர்த்ததின் காரணமாக எங்கள் தொழில் மிகப் பெரிய பின்ன டைவை சந்தித்துள்ளது. நான் உள்பட பலரும் முழுமையாக இத்தொழிலை மட்டுமே சார்ந்து உள்ளோம். ஆனால், ஏறிவரும் விலைவாசி, பொருளாதார பாதிப்பு காரணமாக தையல் கூலியும் கணிசமாக அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் முன்பு ஒரு சட்டை தைப்பதற்கு ரூ.150 முதல் ரூ.200 வரை வாங்கி வந்தோம். தற்போது ரூ.300 வரை வாங்குகிறோம். அதே போல ஒரு முழுக்கால் சட்டை தைப் பதற்கு கடந்த காலங்களில் ரூ.200 முதல் ரூ.240 வாங்கிய நிலையில், தற்போது ரூ.350 முதல் ரூ.400 ரூபாய்க்கு தைத்துக் கொடுத்தால் மட்டுமே எங்களுக்கு கட்டுப்படி ஆகிறது. இதன் காரணமாக வாடிக்கையா ளர்கள், ரெடிமேடு ஆடைகளை விரும்பி வாங்குகின்றனர். ரெடிமேடு ஆடை களுக்கு போட்டியாக எங்களால் மிகக் குறைந்த விலையில் துணிகளை தைத்துக் கொடுப்பது என்பது முற்றிலும் முடியாத விஷயமாக உள்ளது. இத னால் ரெடிமேட் ஆடைகள் விற்பனை அதிகரித்து வருகிறது. ரெடிமேட் ஆடை கள் தரம் குறைவாக இருந்தாலும், விலை குறைவாக இருக்கிறதே என ரெடிமேடு ஆடைகளை தற்போது அனைத்து தரப்பினரும் விரும்பி வாங்குவதால், எங்கள் தொழில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளது. இருந்தபோதிலும் ஒரு சில வாடிக் கையாளர்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு கொடுத்து வருவதால் நாங்கள் பொருளாதார பாதிப்பிலிருந்து மீளா விட்டாலும், சமாளித்து வருகிறோம்.
இது போதாக்குறைக்கு கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு அறிவிப்பால் கடைகளை திறக்க முடி யாத சூழல் உள்ளிட்ட காரணங்க ளாலும் தொழில் மிகப் பெரிய பின்ன டைவை சந்தித்துள்ளது. அடுத்த மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளில் தையல் தொழில் முற்றிலுமாக அழிந்து போன தொழிலாக இருக்கும் என்பதில் என்ற மாற்று கருத்தும் இல்லை. சிறுவயது முதலே இந்த தொழிலை சார்ந்தே இயங்கி விட்டதால் வேறு தொழில் ஏதும் கற்றுக் கொள்ளாததாலும், கடைசி காலம் வரை இதிலேயே தாக்குப் பிடிப்போம் என்ற ஒரு நம்பிக் கையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டு களாக, ஏராளமான சிறு,குறு தொழில்கள் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. இதுகுறித்து ஒன்றிய, மாநில அரசுகள் தொலைநோக்கு பார்வை யுடன் உரிய திட்டமிடுதல் ஏற்படுத்தி சிறு,குறு தொழில்களை பாதுகாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர் களின் கோரிக்கையாக உள்ளது. - பிரபாகரன் பள்ளிபாளையம்.