districts

img

திருப்பூரில் த.மு.எ.க.ச. இலக்கிய அமர்வு

திருப்பூர், செப். 1 - திருப்பூரில் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட குழு சார்பில் இலக்கிய அமர்வு நடைபெற்றது.  திருப்பூர் கே ஆர் சி சிட்டி சென் டரில் ஞாயிறன்று நடைபெற்ற இந்த இலக்கிய அமர்வுக்கு சங்கத்தின் தெற்கு கிளை தலைவர் கவிஞர் கோவை சதாசிவம் தலைமை ஏற் றார். வடக்கு கிளை தலைவர் டி.நாக ராஜ் வரவேற்றார்.  பத்மஸ்ரீ விருது பெற்ற மேட்டுப்பா ளையம் பத்ரப்பன் தொகுத்த, பாரதி  மற்றும் சுற்றுச்சூழல் கும்மி பாடல்கள்  த.மு.எ.க.ச. மறு வெளியீடாக இந்நி கழ்ச்சியில் வெளியிடப்பட்டது. சங் கத்தின் முன்னோடி, முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் விழிப்பு எம்.நடராஜன் இந்நூலை வெளியிட சமத்துவ கும்மி அமைப்பா ளர் யாழ் ஆறுச்சாமி, சிட்கோ கலைக் குழு மகேஷ், திருப்பூர் கலைக்குழு டி. மினி மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுசீலா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  இந்நூல் குறித்து பேசிய சங்கத் தின் மாநில செயற்குழு உறுப்பினர்  ஆ.ஈஸ்வரன், வள்ளி கும்மி என்பதை  குறிப்பிட்ட சாதியின் அடையாளமாக தற்போது முன்னிறுத்துகின்றனர். ஆனால் கும்மி என்பது எல்லா சாதியினருக்கும் ஆனது. பத்மஸ்ரீ பத்ரப்பன், 90 வயது ஆனவர். அறு பது ஆண்டு காலம் கும்மி பற்றி ஆராய்ந்து, மற்றவர்களுக்கு பயிற்சி  அளித்து வருகிறார். எனவே அவரி டம் இருந்த கையெழுத்து பிரதிகளை  பெற்று தற்போது நூல் வடிவம் பெற் றுள்ளது என்று குறிப்பிட்டார்.  முன்னதாக பாடகர் து.சோ.பிரபா கரன், தலைமையாசிரியர் ஜெயலட் சுமி, தேவயானி, மைதிலி நிதர்சனா,  வீ.கதிர்வேல், பாடகர் கிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர் ஸ்ரீநிதி, ஆகி யோர் கவி பாடல்கள் வாசித்தனர். இதைத் தொடர்ந்து, கவிதைகள்  இன்றி வேறில்லை என்ற தலைப்பில்,  கவிஞர் குணசுந்தரி ராமமூர்த்தி, கவிதைகளின் பல்வேறு தாக்கங் கள், பரிணாமங்கள் குறித்து உரை யாற்றினார். தொடர்ந்து, வெற்றிகர மாக திரையில் ஓடிக் கொண்டிருக் கும் வாழை திரைப்படம் குறித்து நாவ லாசிரியர் சம்சுதீன் ஹீரா உரையாற் றினார். இதையடுத்து கதைகளின் கதை எனும் தலைப்பில் வணக்கம் திருப்பூர் யூ டியூப் இயக்குனர் மு. திருப்பதி உரையாற்றினார். இந்த இலக்கிய அமர்வில் திருப்பூர் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமுஎகசவினர் மற்றும் கலை  இலக்கிய ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் காங் கேயம் சங்க உறுப்பினர் வீ.கதிர் வேல் நன்றி கூறினார்.