கோவை, செப். 24- துடியலூர் கூட்டுறவு விவசாயி சேவா ஸ்தாபனத்தில் (டியூ காஸ்) கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டார். கோவை துடியலூரில் டியூகாஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் துடியலூர் கூட்டுறவு விவசாயி சேவா ஸ்தாப னம் செயல்பட்டு வருகின்றது. இதில், ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார், இதனைத்தொடர்ந்து ஆட்சியர் செய்தியாளர்களி டம் கூறுகையில், இங்கு விதைகள் உற்பத்திபிரிவில், தரமான நெல் விதைகளை “கோவை விதைகள்” என்ற பெயரில் உற்பத்தி செய்து தமிழ்நாடு முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுசங்கங்கள் வாயிலாக விவசாயிக ளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பயிர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்க நுண்ணூட்ட சத்து உரம் வேப்பம் பவுடர் அதிகஅளவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்ப டுகிறது. 2023 மற்றும் 2024 ஆண்டில் ஆகஸ்ட் மாதம்வரையிலான இரண்டு ஆண்டுகளில் ரூ.1.25கோடி மதிப்பீட்டில் 415.81 டன் விதைகளும், ரூ.7.08 கோடி மதிப்பீட்டில் 3941.64 டன் உரங்க ளும், ரூ.79.88 இலட்சம் மதிப்பீட்டில் 155.70 டன் நுண்ணூட் டச்சத்து உரங்களும், ரூ.8.12 கோடி மதிப்பீட்டில் 1626.76 டன் வேப்பம் பவுடரும், ரூ.28.56 இலட்சம் மதிப்பில் பூச்சிக் கொல்லி மருந்துகளும், ரூ.5.29 கோடி மதிப்பீட்டில் வேளாண் கருவிகளும், டிராக்டர் பிரிவில் ரூ.6.11 இலட்சம் மதிப்பீட் டில் விவசாயிகளுக்கு தேவையான டிராக்டர்கள் குறைந்த வாடகையில் வழங்கப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வின்போது துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா நிறுவன மேலாண் இயக்குநர் பழனிசாமி, வரு வாய் கோட்டாட்சியர் கோவிந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் மல்லிகா, மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.