districts

img

28 ஆண்டுகளுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்படைப்பு

கோவை, ஜூன் 10- லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கடந்த 1996 ஆம் ஆண்டு பறிமுதல் செய் யப்பட்ட 500 ரூபாயை, 28 ஆண்டுக ளுக்கு பின்பு புகார்தாரரிடம் ஒப்படைக் கப்பட்ட சம்பவம் கோவையில் நிகழ்ந் துள்ளது.

கோவை மாவட்டம், வடவள்ளி யைச் சேர்ந்தவர் கதிர்மதியோன். இவர் நுகர்வோர் தொடர்பான பல்வேறு வழக்குகளை தொடுத்திருப்பதோடு, சமூக ஆர்வலராகவும் இருந்து வருகி றார். கடந்த 1996 ஆம் ஆண்டு தனது வீட் டிற்கு மின் இணைப்பில் பெயர் மாற்றம்  செய்வதற்காக அவர் மின்வாரிய அதி காரிகளிடம் விண்ணப்பித்திருந்தார். அப்போது, 500 ரூபாய் லஞ்சம் தர வேண் டும் என அந்த அதிகாரி கேட்டுள்ளார்.  இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு  தகவல் தெரிவித்த கதிர்மதியோன், ரசா யனம் தடவிய நான்கு 100 ரூபாய் நோட் டுகள் மற்றும் இரண்டு 50 ரூபாய் நோட்டு கள் அந்த அதிகாரியிடம் கொடுத்துள் ளார். அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை யினர் அந்த அதிகாரியை கையும் களவு மாக பிடித்து கைது செய்தனர். இவ்வ ழக்கில் சாட்சியமாக கதிர்மதியோன் கொடுத்த 500 ரூபாய் பணம் நீதிமன்றத் தில் ஒப்படைக்கப்பட்டு, கடந்த 2001 ஆம்  ஆண்டு இந்த வழக்கு முடிவுக்கு வந் தது. இருப்பினும் கதிர்மதியோன் கொடுத்த 500 ரூபாய் பணம் அவருக்கு திரும்ப வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக 2007 ஆம் ஆண்டு அவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக் கல் செய்திருந்தார். அம்மனுவில், பல முறை விசாரிக்கப்பட்ட நிலையில், கதிர் மதியோனை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி 500 ரூபாய் பணத்தை திரும்ப  பெற்றுக் கொள்ளுமாறு கடிதம் அனுப் பப்பட்டிருந்தது. அதன்படி நீதிமன்றத் தில் ஆஜரான கதிர்மதியோனிடம், 28 ஆண்டுகளுக்குப்பிறகு அந்த பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கதிர்மதியோன் கூறுகை யில், தங்கள் சொந்த பணத்தை கொடுத்துவிட்டு, அதனை திரும்பப் பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண் டிய நிலை இருந்து வருகிறது. இதை  கருத்தில் கொண்டு நீதிமன்றம் உரிய  வழிகாட்டு நெறிமுறைகளை உரு வாக்க வேண்டும். என்றார். கதிர்மதி யோனிடம் திரும்ப வழங்கப்பட்டுள்ள இந்த ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இல்லை என்பது குறிப்பி டத்தக்கது.