districts

img

பிறந்து மூன்றே நாளான குழந்தைக்கு அறுவை சிகிச்சை

ஈரோடு, செப். 26- ஈரோடு தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனையில் பல் நோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரி வில், பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு சுவாசக் குழாய் மற்றும் உணவுக்குழாய் இணைந்து இருந் தது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் பிரித்து அரசு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ள னர். ஈரோடு மாவட்டம், பாரதிநகர், பி.பெ.அக்ரஹாரத்தைச் சேர்ந்த பிரியா  பிரபாகரன். இவர்களுக்கு கடந்த 7 ஆம் தேதி ஈரோடு தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவ மனை, பல்நோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவில் 8 மாதத்தில் 2.250 கிலோ கிராம் எடையுடன் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு முதலில் நுரையீரல் வளர்ச்சி குறைபாட்டிற் கான அறிகுறிகள் தென்பட்டது. குழந்தைக்கு செயற்கை சுவா சம் மற்றும் ரூ.32 ஆயிரம் மதிப்பி லான நுரையீரல் வளர்ச்சி மருந்து அளிக்கப்பட்டது.இந்நிலையில் சுவா சக்குழாய் மற்றும் உணவுக்குழாய் இணைந்து இருந்ததை 2 ஆவது நாளில் கண்டறியப்பட்டது. மேலும், 3 ஆவது நாளில் அதற்கான அறுவை சிகிச்சை காலை 9 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்றது.  அப்போது ரத்த போக்கினை ஈடு செய்யும் வகை யில் குழந்தைக்கு தேவையான ரத் தம் செலுத்தப்பட்டது. ஈரோடு தந்தை பெரியார் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதல் முறை யாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிக்சையில் மூலம் உணவு குழாய் உரிய முறையில் செயல்படுவதை எட்டாவது நாள் பரிசோதனையில் உறுதி செய்யப்பட் டுள்ளது. மேலும், அக்குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கப்பட்டு தற்போது குழந்தை நல்ல முறையில் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் குழந்தை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த அறுவை சிகிச்சையானது தனியார் மருத்துவமனையில் மேற் கொள்ளப்பட்டிருந்தால் ரூ.8 லட்சம் வரை செலவாகும்.  மிகவும் ஆபத் தான ஒன்றாகும். இச்சிகிச்சை முற்றி லும் இலவசமாகவும் நல்ல முறையி லும் செய்யப்பட்டுள்ளது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். இதுகுறித்து, குழந்தையின் தாயார் பிரியா தெரிவித்ததாவது, எனது கணவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். எனக்கு அரசு தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந் தைக்கு சுவாச பிரச்சனை உள்ளதாக தெரிவித்தனர். உடனடியாக குழந் தைக்கு அறுவை சிகிச்சை மேற் கொண்டு, குறைபாட்டினை சரி செய்து, என் குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர். இது என்வாழ் நாளில் நான் மறக்க முடியாத நிகழ் வாகும். அனைவருக்கும் எனது நன்றி யினை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.