ஈரோடு, ஆக.25- பாகுபாடு இல்லாமல் நீதி வழங்கி னால் தான் நீதிமன்றங்களுக்கு அங் கீகாரமும், மதிப்பும் கிடைக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதி எம்எம்.சுந்த ரேஷ் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி யில் சார்பு நீதிமன்றம், எழுமாத்தூ ரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றம் மற்றும் பெருந்துறையில் புதுப்பிக்கப்பட்ட பழைய நீதிமன்றங் களுக்கான கட்டடங்கள் திறப்பு விழா சனியன்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி பி.முருகேசன் வர வேற்றார். உயர்நீதிமன்ற நீதிபதியும், ஈரோடு மாவட்ட பொறுப்பு நீதிபதியு மான அனிதா சுமந்த் முன்னிலை வகித் தார். உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் கலந்து கொண்டு, நீதி மன்ற புதிய கட்டடங்களை திறந்து வைத்தார். இதன்பின் அவர் பேசுகை யில், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகளை மாண்பு கருதி நீதியரசர் கள் என்று அழைக்கப்பட்டாலும், இங்கு பணியாற்றும் கடைநிலை பணி யாளர்கள் முதல் தலைமை நீதிபதி வரை அனைவரும் நீதிக்காக பணி யாற்றி வருகின்றனர். நீங்கள் (வழக் குரைஞர்கள்) எப்போதும் காயங் களை நியாயப்படுத்துங்கள்; நியாயங் களை மட்டும் காயப்படுத்தாதீர்கள். இந்த உணர்வு அனைத்து நீதிபதி களுக்கும், வழக்குரைஞர்களுக்கும் இருக்க வேண்டும். எவ்வித பாகுபா டும் இல்லாமல் நீதி வழங்க வேண் டும். அப்போது தான் நீதிமன்றத்திற்கு அங்கீகாரமும், மதிப்பும் கிடைக்கும். புதிதாக நீதிமன்றங்கள் வருவது மட் டும் நமக்கு பெருமை கிடையாது. நீதி மன்றங்கள் மக்களை நோக்கி செல்ல வேண்டும், என்றார். தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் பேசுகையில், தற் போது திறக்கப்பட்டுள்ள புதிய நீதி மன்றங்களையடுத்து ஈரோடு மாவட் டத்தில் மொத்த நீதிமன்றங்களின் எண்ணிக்கையானது 41 ஆக உயர்ந் துள்ளது. பல நீதிமன்றங்கள் உரு வாக்கப்பட்டுள்ள போதிலும் ஏராள மான வழக்குகள் தேங்கி கிடக்கின்ற காலகட்டத்தில் தான் நாம் இருக்கி றோம். நீதிமன்றங்கள் பழைய வழக் குகளை விரைந்து முடித்து நீதித் துறை நம்பிக்கையை நிலைநாட்டுவ தன் மூலம் பொதுமக்களுக்கு நியாய மான தீர்ப்புகள் வழங்கவும் உதவும், என்றார். இந்நிகழ்வில், உயர்நீதி மன்ற நீதிபதிகள் சதீஸ்குமார், குமரேஸ் பாபு, பதிவாளர் ஜோதிராமன், ஆட்சி யர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) அபிசேக் குப்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.