கோவை, ஜன.31- ஒன்றிய அரசின் தொழிலாளர்கள் மற்றும் விவசாய விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் சுமைப் பணி தொழி லாளர்கள் கலந்து கொள்வார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் மாநில சம்மேளனத்தின் குழுக் கூட்டம், கோவை மில் தொழிலாளர்கள் சங்க கட்டிடத் தில் புதனன்று நடைபெற்றது. முன்னதாக மறைந்த முதுபெரும் தலைவர் என்.சங்க ரய்யாவின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த கூட்டத் தில் தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம் மேளனத்தின் தலைவர் வெங்கிடுபதி, செயல் தலைவர் குணசேகரன், செயலாளார் அருள் குமார், பொறுப்பாளர் திருவேட்டை, துணைச் செயலாளர் ராஜன், சம்மேளன நிர்வாகிகள் மற்றும் சம்மேளன குழு உறுப்பினர்கள் பங் கேற்றனர். முன்னதாக கூட்டத்தில், அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய பாஜக அர சின் தொழிலாளர்கள் மற்றும் விவசாய விரோத நடவடிக்கைகளை கண்டித்து பிப்.16 ஆம் தேதி நடைபெறுகின்ற வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்களில், சுமை தூக் கும் தொழிலாளர்கள் பங்கேற்று போராட் டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். முறைசாரா தொழிலாளர்கள் நல வாரியத் தில் ஆன்லைன் குளறுபடிகளை உடனடி யாக சரி செய்ய வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட 70 லட்சம் தொழிலாளர் களின் தரவுகள் காணாமல் போனதாக நலவா ரியம் கூறியுள்ள நிலையில், நிபந்தனை யின்றி அந்த தொழிலாளர்களின் தரவை மீண் டும் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.