districts

img

மாடித்தோட்டம் அமைக்க மானிய விலையில் விதைகள் வழங்கல்

இளம்பிள்ளை, ஜன.28- தோட்டக்கலைத்துறை சார்பில் மாடித்தோட்டம் அமைக்க மானிய விலையில் காய்கறி விதைகள் மற்றும் செடிகள் வழங்கப்பட்டது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை உழவர் சந்தையில் மகுடஞ்சாவடி தோட்டக்கலை துறை சார்பில்  மாடித்தோட் டம் அமைக்க மானிய விலையில் காய்கறி விதைகள் வழங் கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 6 வகையான காய்கறி  விதைகள், உயிர் உரங்கள், இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து, சாகுபடி முறைகளை விளக்கும் கையேடு மற்றும்  மாடித்தோட்ட தளைகள் மானியத்தில் ரூ.225க்கு வழங்கப் பட்டன. இதனை இளம்பிள்ளை உழவர் சந்தைக்கு வரும் இல்லத்தரசிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆர்வத்து டன் வாங்கிச் சென்றனர். இந்நிகழ்வில் தோட்டக்கலை துணை அலுவலர் ராகவேந்திரன், உதவி அலுவலர் நாக ராஜ், உழவர் சந்தை உதவி வேளாண்மை அலுவலர் ராம் சந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.