districts

img

மின்வாரிய ஊழியர்களுக்கு நவீன கருவி வழங்கல்

நாமக்கல், ஜூன் 27- உயிரிழப்பை தடுக்கும் வகையில், மின்வாரிய ஊழியர்களுக்கு நவீன கருவி வழங்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை தடுக்கும் வகை யில், முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி வழங்கப்பட்டு வருகிறது. இக்க ருவியை தலைக்கவசத்திலோ, கையிலோ அணிந்து கொண்டு மின் கம்பங்களில் ஏறும்போது, மின்சாரம் பாய்ந்தால் அது  எச்சரிக்கை ஒலி எழுப்பி அலர்ட் செய் யும். மின்சாரம் பாயும் கம்பத்தில் தவறு தலாக ஏறிவிட்டால் அந்த இயந்திரம் எச்சரிக்கை ஒலி எழுப்பும். அளவுக்கு அதிகமாக வோல்டேஜ் வந்தால் சிவப்பு நிற லைட், பீப் சவுண்ட் எழுப்பி அலர்ட் செய்யும்; இதன் மூலம் விபத்துகள் குறைக்கப்படும். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவல கத்தில் நடந்த நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட கேங்மேன்களுக்கு இந்த நவீன கருவி வழங்கப்பட்டன. நாமக் கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.