districts

img

கர்ப்பிணிப் பெண்களுக்கு காலாவதியான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கல்

திருப்பூர், ஜன.29- திருப்பூர் மாநகராட்சி 15 வேலம்பாளையம் மேம்படுத்தப் பட்ட நகர் நல மையத்தில் 5 மாத  கர்ப்பிணி பெண்களுக்கு காலா வதியான ஊட்டச்சத்து பொருட் கள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள் ளது. தமிழகத்தில் கர்ப்பிணிக ளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைய, தமிழக அரசு சார்பில், ஊட்டச்சத்து மாவு, இரும்புச்சத்து டானிக், அரை லிட் டர் ஆவின் நெய், பேரீச்சம்பழம், குடற்புழு நீக்க மாத்திரை ஆகி யவை அடங்கிய சிறப்பு பெட்டகம் வழங்கப்படுகிறது. அதில், இந்த உணவுப் பொருட்களுடன் துண்டு, பிளாஸ்டிக் கூடை ஆகியவையும் வழங்கப்படுவது வழக்கம். இதன் அடிப்படையில் திருப் பூர் 15 வேலம்பாளையம் பகுதி யில் உள்ள சுகாதார மையத்தில் புதனன்று ஐந்து மாத கர்ப்பிணி பெண்ணிற்கு ஊட்டச்சத்து பெட்ட கம் வழங்கப்பட்டுள்ளது. இப்  பெட்டகத்தை வீட்டிற்கு கொண்டு சென்று பார்த்தபோது அந்த பெண் ணின் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறப்பு பெட்ட கத்தில் உள்ள பேரீச்சம் பழம் காலாவதியாகி ஒரு மாதம் ஆகி றது. ஆவின் நெய் ஓரிரு நாட்களில் காலாவதி ஆகிவிடும் என அதில் தேதி குறிக்கப்பட்டுள்ளது. காலா வதியான உணவுப் பொருட்களை உட்கொண்டால் வயிற்றில் வள ரும் குழந்தைக்கும், தாய்க்கும் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள் ளது.  இதேபோல் வேறுசில கர்ப்பி ணிப் பெண்களுக்கும் காலாவதி யான ஊட்டச்சத்து பெட்டகம் வழங் கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப் பட்ட ஐந்து மாத கர்ப்பிணி பெண் ணின் கணவர் இதுகுறித்து மாநக ராட்சி நிர்வாகத்திற்கு ட்விட்டர் மூலம் புகார் அனுப்பியுள்ளார். மேலும், கர்ப்பிணிப் பெண் களுக்கு தமிழக அரசின் திட்டத் தில் வழங்கப்படும் இந்த ஊட்டச் சத்து பொருட்கள் காலாவதியான நிலையில் இருப்பதை சம்பந்தப் பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தி ருக்க வேண்டும். காலாவதியான பொருட்கள் வழங்கப்பட்டிருப் பது குறித்து தமிழக அரசும், சுகா தாரத் துறையினரும் விசாரணை  நடத்த வேண்டும். இப்பிரச்சனை யில் முறைகேடு நடைபெற்றிருந் தால் சட்டப்படி உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றும் பாதிக் கப்பட்டவர்கள் தரப்பில் வலியு றுத்தப்பட்டுள்ளது.