districts

img

ஊட்டசத்து பொருட்கள் வழங்கல்

அவிநாசி, ஆக.28- அவிநாசி அரசு பொது மருத்துவமனையில் காசநோய் சிகிச்சை பெறுவோருக்கு  ஊட்டசத்து பொருள்கள் வழங்கும்  நிகழ்ச்சி அவிநாசி நல்லது நண்பர்கள் அறக்கட்டளை சார்பில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பொறுப்பாளர் பிரகாஷ் ஊட்டச்சத்து பொருள்களை வழங்கினார். முதன்மை மருத்துவர் கண்ணன்  மகராஜ் தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் ரவிக் குமார் வரவேற்றார். மருத்துவர் விண்ணரசன் காசநோய் விழிப்புணர்வு குறித்து பேசினார். வழக்குரைஞர் கோபால கிருஷ்ணன், பொறுப்பாளர்கள் கண்ணன், ஜீவா உள்ளிட் டோர் பங்கேற்றனர்.  இதில், தொடர்ந்து 6 மாதத்திற்கு சிறுதானிய உணவுகள்,  முட்டை, உலர் பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்படவுள் ளது.