உதகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு
உதகை, அக்.20- நீலகிரி மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாள ராக சுந்தரவடிவேல் பொறுப்பேற்றுக் கொண்டார். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த ஜனவரி மாதம் முதல் பிரபாகர் பணியாற்றி வந்தார். அண்மை யில் தமிழ்நாடு முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட எஸ்பி.,க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் கடந்த பத்து மாதங்களாக நீலகிரி மாவட்ட காவல் ஆணையராக இருந்த பிரபாகர், கரூர் மாவட்ட எஸ்பி., யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக ராமநாதபுரம் கடலோர காவல் பிரிவு எஸ்பி.,யாக பணிபுரிந்து வந்த சுந்தரவடிவேல் நீலகிரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர் வெள்ளி யன்று காவல் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்று கொண் டார்.
கோவையில் மலையகம் 200 பன்னாட்டு மாநாடு
கோவை, அக். 20- கோவையில் மலையக தாயகம் திரும்பிய தமிழருக் கான இயக்கம் சார்பில் மலையகம் 200 பன்னாட்டு மாநாடு நடைபெற உள்ளதாக இவ்வமைப்பினர் தெரிவித்தனர். மலையக தாயகம் திரும்பிய தமிழருக்கான இயக்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு கோயம்புத்தூர் பத்திரிக்கை யாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கந்தையா செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, வரும் ஞாயிறன்று மலையகம் 200 பன்னாட்டு மாநாடு கோவை யில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் நோக்கம் குறித்த அறிக்கையை வெளியிட உள்ளோம். மாநாட்டில் தாயகம் திரும்பிய தமிழர்கள் பற்றி தமிழக அரசு ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 95 முகாம்களில் உள்ள நாடற்ற தமிழர்களாக உள்ள மக்களைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். இந்த நாட்டில் இருக்க விருப்புவர்களுக்கு குடி யுரிமை கொடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும். அது போல் மலையக தமிழர்களுடைய பிரச்சனைகளை பற்றி பேசவும், அவர்கள் எதிர்கொள்ளும் நிலப்பிரச்சினை வீட்டுரிமை போன்ற பிரச்சினைகளை பேசும் பொருளாக ஆக்க விரும்புகிறோம், அந்த அடிப்படையில் மலையக தமிழகர்கள் எதிர்கொள்ளூம் பிரச்சனைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நூலாக வெளியிட உள்ளோம். இந்த பன்னாட்டு மாநாட்டில் தமிழக அமைச்சர் செஞ்சி.மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார். முன்னதாக இந்த பேட்டியின்போது, தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.
கலைஞர் புகைப்பட கண்காட்சியும் – ஆனை முகத்தானே பாடலும்
கோவை, அக்.20- இதழாளர் – கலைஞர் கண்காட்சி கோவை வஉசி மைதா னத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு துவங்கப் பட்டது. இதில், அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமி நாதன், மனோதங்கராஜ், செஞ்சி.மஸ்தான், கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த புகைப்பட கண்காட்சியில் கலைஞர் இதழியில் பணியில் எவ்வாறு செயல்பட்டார் என்பதற்கான புகைப்பட தொகுப்பை கண்காட்சியாக வைக்கப்பட் டிருந்தது. முன்னதாக இந்த கண்காட்சி துவக்விழாவின் போது, ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான் பாடல் ஒளிபரப்பப்பட்டது. திராவிட இயக்கத்தின் முகமாக பார்க்கப் படுகிற கலைஞர் புகைப்பட கண்காட்சியில் கடவுளை துதி பாடுகிற பாடல் ஒளிபரப்பபட்டது சர்ச்சையை ஏற்படுத் தியது. இதுகுறித்து, விசாரிக்கையில், அது புகைப்பட கண் காட்சி துவங்கும் போது அருகில் உள்ள தனியார் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் மைதானம் முழுக்க ஒலிபெருக்கியை கட்டியிருந்த நிலை யில், இந்த தனியார் கண்காட்சி மையத்தில் ஒளிபரப்பப் பட்ட பாடல் இதழாளர் – கலைஞர் புகைப்பட கண்காட்சி துவக்கப்பட்ட அதே நேரத்தில், இந்த பாடல் ஒளிபரப்பான தால் இந்த குழப்பம் ஏற்பட்டதாக தனியார் கண்காட்சி மையத் தினர் தெரிவித்தனர்.
பேருந்து விபத்தில் 9 பலி எதிரொலி ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து உத்தரவு
உதகை, அக்.20- குன்னூர் அருகே நடந்த பேருந்து விபத்தால் ஓட்டுநர் உரிமத்தை பத்தாண்டுக்கு ரத்து செய்து வட்டார போக்கு வரத்து அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். தென்காசி மாவட்டம், கடையம் பகுதியை சேர்ந்த 60 பேர் கடந்த செப்.30ஆம் தேதியன்று ஊட்டிக்கு சுற்றுலா வந்து விட்டு மீண்டும் திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது குன்னூர்-மரப்பாலம் அருகே மலைபாதையில் 9-வது வளை வில் பேருந்து கட்டுபாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 6 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில், ஊட்டியில் இருந்து குன்னூர் வரை ஓட்டுநர் கோபால் (32) என்பவர் பேருந்தை இயக்கி உள்ளார். பின்னர், முத்துக்குட்டி பேருந்தை இயக்கினார்.அப்போது கிளச் பிரஷர் பிளேட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. ஆனாலும் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் முத்துக் குட்டி (65) ஓட்டியதால்தான் விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் குமார், காவல் ஆய்வாளர் சதீஷ் தலைமையிலான போலீ சார் இதுகுறித்து விசாரணை நடத்தி, பேருந்து ஓட்டுநர் கள் முத்துக்குட்டி, கோபால், பேருந்து உரிமையாளர் சுப்பிர மணி, சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகி யோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டுநர் முத்துகுட்டியை சிகிச்சை முடித்த பின் கைது செய்த போலீசார் ஊட்டியில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் நேர்நிறுத்தி பிணையில் விடுவித் தனர். இந்நிலையில், அஜாக்கிரதையாக பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் முத்து குட்டியின், ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
அவிநாசி, அக். 20- கட்டடப் பணியின் போது மின்சாரம் தாக்கி வட மாநில தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. அவிநாசி அடுத்த மங்கலம் ரோட்டில் தாமரைக்குளம் எதிரே பழைய கார்கள் உடைக்கும் பட்டறை உள்ளது. இப் பட்டறையின் உரிமையாளர் சலீம், அதன் அருகிலேயே, புதிய வீடு கட்டி வருகிறார். இதற்காக வடமாநில தொழிலா ளர்கள் கட்டடப்பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந் நிலையில், கட்டடப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஒரிசா மாநிலம், கஞ்சாம் பகுதியை சேர்ந்த துனா நாயக் என்பவரின் மகன் சிந்தாந்த நாயக் (27), என்பவர் காங்கீரிட் பில்லர் அமைப்பதற்காக சுற்றிலும் தகர சீட்டை பொருத்த அருகில் உள்ள இரும்பு கம்பியை பயன்படுத்த மேலே தூக்கி உள்ளார். அப்போது அருகில் சென்று கொண் டிருந்த உயரழுத்த மின் கம்பி மீது இரும்பு கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொன்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்த னர். இந்த விபத்து குறித்து அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தாராபுரத்தில் உரிய அனுமதி இன்றி திறக்கப்பட்ட மருத்துவமனை மூடல்
தாராபுரம், அக்.20- தாராபுரத்தில் முறையாக அனுமதி பெறாமல் திறக்கப் பட்ட மருத்துவமனை திறக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் நகராட்சி நிர்வாகத்தால் மூடப்பட்டது. தாராபுரத்தில் அசோக்குமார் என்பவர் ஆற்றல் பவுண்டே ஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆற்றல் அறக்கட் டளை மூலம் குறைந்த விலையில் மருத்துவம் பார்க்கபடும் என விளம்பரம் செய்து வந்த நிலையில், தாராபுரம் 2 ஆவது வார்டு பகுதியில் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற் றது. இந்த மருத்துவமனைக்கு உரிய அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து தாராபுரம் நகராட்சிக்கு புகார் வந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் உரிய அனுமதி பெறாத மருத்துவமனை திறக்கப்பட்ட இரண்டு மணி நேரத் தில் மூடினர். இது குறித்து தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்பு கண் ணன் கூறுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவது றையில் மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட மக்களுக்கு பல எண்ணற்ற நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தாராபுரம் 2 ஆவது வார்டு பகுதியில் உரிய அனுமதி பெறாமல் போலியான மருத்துவமனை செயல்பட ஏற்பாடு நடைபெற்று வருகிறது என பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது. புகா ரின் அடிப்படையில் நேரில் சென்று ஆய்வு செய்த போது சுகா தாரதுறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், நக ராட்சி நிர்வாகத்திடமும் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் மருத்துவமனை திறந்தது தெரியவந்தது. இதையடுத்து, அனுமதி இல்லாமல் மருத்துவம் பார்க்க இருந்த ஆற்றல் மருத்துவமனையை காவல்துறையினர், வருவாய் துறை யினர், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறையைச் சேர்ந்த அரசு அதிகாரிகளின் உதவியுடன் மருத்துவமனை மூடப் பட்டது என தெரிவித்தார்.
மின்வாரிய ஊழியர் வீட்டில் திருட்டு
அவிநாசி, அக்.20- அவிநாசி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றைற திருடிச் சென்ற கட்டடத் தொழிலாளர்கள் 3 பேரை சேவூர் போலஸார் வியாழக்கிழமை கைது செய்த னர். சேவூர் போலீஸ்சார் அவிநாசி சாலையில் வியாழக்கி ழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த இரு நபர்களை பிடித்து விசாரனை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கள், நாகபட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி செல்வம் மகன் விநோத்குமார்(29), தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயன் குறிச்சி பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் அருள்ராஜ்(27) என்பது தெரியவந்தது. கட்டடத் தொழிலாளிகளான இவர்கள் தனது நண்பருடன் சேர்ந்து கடந்த இரு நாள்களுக்கு முன்பு சேவூர் அருகே அ. குரும்பபாளையம் கிரீன் கார்டன் பகுதியில் வசித்து வரும் மின்வாரிய பணியாளரான ஜெயபாரதி என்பரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளிருந்த 10 பவுன் தங்க நகைகள், 400 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் விசாரணையில், இவ்வழக்கில் நாகப்பட்டினம் மாவட் டம் வழுவாகுடி கலியபெருமாள் மகன் பிரகாஷ்(39) என்பவ ரும் தொடர்புடையவர் என்று தெரியவந்துள்ளது.
கொள்ளையரை பிடித்த போலீசாருக்கு பாராட்டு
ஈரோடு, அக்.20- ஆந்திர மாநிலம் சென்று கொள்ளையரை பிடித்த தனிப் படை போலீசாருக்கு மேற்கு மண்டல காவல் துறை துணைத் தலைவர் சரவணசுந்தர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், பழையபாளையம் கணபதி நகரைச் சேர்ந்த துரைசாமி என்பவரது வீட்டில் 150 பவுன் தங்க நகை, கடந்த ஆக.5 ஆம் தேதியன்று கொள்ளை போனது. இதைய டுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி களை ஆதாரமாக கொண்டு கொள்ளையனை போலீசார் தேடி வந்தனர். இதில் 2 ஆயிரம் கண்காணிப்பு கேமரா பதிவுகள், ஆயிரக்கணக்கான பழங்குற்றவாளிகள் நடத்தைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதன் முடிவில் ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (22) என்ற வாலிபர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக் கப்பட்டது. அவரை பிடிக்க ஈரோடு போலீசார் 2 முறை ஆந்திரா மாநிலம் சென்று திரும்பினர். இறுதியில் கடந்த அக்.1 ஆம் தேதியன்று ஆந்திராவில் பதுங்கியிருந்த ஆனந்தகுமாரை கைது செய்து, அவரிடமிருந்து 150 பவுன் தங்க நகையும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கைதான ஆனந்தகுமார் மீது தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் சேர்த்து 40க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. நகை திருட்டில் ஈடுபட்ட நபரை பிடிக்கும் குழுவில் ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமை யில், ஆய்வாளர்கள் சோம சுந்தரம், சண்முகம் உள்ளிட்ட 14 பேர் கொண்ட போலீசார் இருந்தனர். இவர்களுக்கு ஏற்க னவே ஈரோடு காவல் கண்காணிப்பாளர் ஜவகர் பாராட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில், அந்த தனிப்படை போலீ சார் அனைவரையும், கோவைக்கு நேரில் வரவழைத்து மேற்கு மண்டல காவல் துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் பாராட்டி தெரிவித்து, அனைவருக்கும் சான்றிதழ்களை வழங் கினார்.
லாரியில் ரகசிய அறை அமைத்து மதுபானம் கடத்திய கும்பல் கைது
ஈரோடு, அக்.20- சரக்கு லாரியில் ரகசிய அறை அமைத்து மதுபானம் கடத்திய கும்பலை ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். ஈரோடு - கரூர் சாலையில், சோலார் அருகே மதுவிலக்கு அமலாக்கத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், காரில் 8 பெட்டிகள் போலி மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதைய டுத்து நடைபெற்ற விசாரணையில் வாழப்பாடியைச் சேர்ந்த நிஜந்தன், சங்கர் என்பதும், உடன் வந்தவர் பாண்டிச்சேரி யைச் சேர்ந்த ஆதவன் என்பதும் தெரியவந்தது. மேலும், 3 பேரும் விற்பனைக்காக மதுபானங்களை கடத்தி ஈரோட்டுக்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த காவல் துறையினர் காரையும், போலி மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மது விலக்கு அமலாக்க துறையினரின் மேற்கொண்ட விசாரணை யில், பாண்டிச்சேரிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே மதுபான குடோனிலிருந்து, லாரியில் மதுபாட்டில்களை கொண்டு வரு வதாகத் தெரிவித்தனர். இத்தகவலின் படி பழுதாகி நின்ற லாரியில் அமலாக்க பிரிவு காவல் துறையினர் சோதனை யிட்டனர். இச்சோதனையில், லாரியின் முன்புறத்தில் ரகசிய அறை அமைத்து போலி மதுபானங்களை கடத்தி வந்தது தெரியவந் தது. இதையடுத்து பாண்டிச்சேரியைச் சேர்ந்த சத்யராஜ், விக் னேஷ், உதயகுமார், செல்வம் ஆகியோர் கைது செய்யப் பட்டனர். மேலும், போலி மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
காட்டுயானையை பிடிக்கும் பணி ஒத்திவைப்பு
ஈரோடு, அக்.20- பொதுமக்களை அச்சுறுத்தி வரும், பார்வை மங்கிய காட்டுயானையை பிடிக்கும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள தாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலி கள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து வாழை, கரும்பு, மக் காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்ப டுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடம்பூர் மலைப்பகுதியிலிருந்து, ஊருக்குள் புகுந்து தொடர்ச்சியாக விவசாய பயிர்களை சேதம் செய்த கட்டையன் யானையை வனத்துறை யினர் பிடித்து பவானி சாகர் வனச்சரகத் தில் உள்ள மங்களப்பட்டி வனப்பகுதியில் விட்டனர். இந்நிலையில், கடந்த சில நாட்க ளுக்கு முன்பு மீண்டும் வனப்பகுதியில் விட்ட கட்டையன் யானை பவானிசாகர் அணை நீர் தேக்கத்தை ஒட்டியுள்ள சித்தன்குட்டை, அய் யம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பகல் நேரத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி யது. ஊருக்குள் நுழைந்த யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கிராம மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் கட்டையன் யானையை பிடிக்க ஆனைமலை புலிகள் காப்பக முகாமில் இருந்து கபில்தேவ் மற்றும் முத்து ஆகிய 2 கும்கி யானைகளை அழைத்து வந்தனர். வனத்துறை ஊழியர்கள், கால்நடை மருத் துவர்கள் அடங்கிய குழுவினர் வனப்பகுதி யில் முகாமிட்டு யானையை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டதால் கட் டையன் யானையை பிடிக்கும் பணிகள் தற்கா லிகமாக ஒத்தி வைக்கப்படுள்ளது. மேலும், கொண்டு வரப்பட்ட 2 கும்கி யானைகளும் மீண் டும் ஆனைமலை புலிகள் காப்பகம் முகா மிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பார்வை மங்கிய கட்டையன் யானை நடமாட் டத்தை வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.