கோவை, டிச.8- பாசி நிதி நிறுவன அதிபரிடம் பணம் பெற்ற வழக்கில் சாட்சியம் அளிக்க ஏடிஜிபி அருண், 4 ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அந்த நிறுவன ஊழியர்கள் 8 பேருக்கு சம்மன் அனுப்ப கோவை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட பாசி நிதி நிறு வனம், மக்களை ஏமாற்றி 930 கோடி ரூபாய் மோசடி செய்தது. இந்த மோசடி வழக்கில், அந்நிறுவனத்தின் பெண் இயக்குநர் கமலவள்ளி மற் றும் மோகன்ராஜுக்கு தமிழ்நாடு முத லீட்டாளர்கள் நலப்பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2020 ஆம் ஆண்டு தண்டனை விதித்து, தீர்ப்பளித்தது. இம்மோசடி வழக்கில் இருந்து பாசி நிதி நிறுவன இயக்குநர்களை காப் பாற்றுவதற்காக, ரூ.2.50 கோடியை லஞ்சமாக பெற்றதாக, அப்போ தைய மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பிரமோத்குமார், அப்போ தைய சிபிசிஐடி துணை காவல் கண் காணிப்பாளர் ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், திருநெல் வேலியைச் சேர்ந்த ஜான் பிரபாகரன் என்கிற அண்ணாச்சி, திருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்கிற தரணி செந்தில்குமார் ஆகியோர் மீது சிபிஐ தனியே வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தது. தொடர்ந்து, வழக்கின் விசாரணை முடிந்து குற் றப்பத்திரிக்கையும் தாக்கல் செய் தது. ஆனால், நீண்ட நாட்களாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டி ருந்தது. இந்த வழக்கை விரைந்து முடிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய zzzzzzபிடித்தது. அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐ.ஜி.பிர மோத்குமார் உட்பட ஐந்து பேர் மீதும் குற்றச்சாட்டுப்பதிவு சிபிஐ நீதிமன் றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கில் விசாரிக்கப்பட வேண் டிய 8 பேர் கொண்ட சாட்சிகள் பட்டி யலை வெள்ளியன்று சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள் ளது. அதில் தற்போது மத்திய அரசின் செயலாளராக இருக்கும் நடராஜன், ஓய்வுபெற்ற ஐ.ஜி சுந்தரமூர்த்தி, அப் ரூவராக மாறிய உதவி ஆய்வாளர் சண்முகய்யா, நிதி நிறுவன அதிபர் கமலவள்ளியின் கார் ஓட்டுநர் கரு ணாகரன், பாசி நிறுவன கணக்கா ளர் மணிகண்டன், ஏடிஜிபி பாலநாக தேவி ஐபிஎஸ், தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் ஐபிஎஸ், ஜஜி கண் ணன் ஆகிய எட்டு பேருக்கும் சம்மன் அனுப்ப கோவை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் 8 பேரும் வருகிற 21, 22ம் தேதிகளில் கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.