districts

img

விலை வீழ்ச்சியால் கரும்பு விவசாயிகள் வேதனை

இளம்பிள்ளை, மே 10- குறைந்த விலைக்கு கரும்பு கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் வேதனை அடைந் துள்ளனர். சேலம் மாவட்டத்தில் தேவூர், ஒடசக்கரை, வெள்ளாளபாளை யம், அம்மாபாளையம், கோனேரி பட்டி, மோட்டூர், கொட்டாயூர், சின் னாம்பாளையம், சோழக்கவுண்ட னூர், குஞ்சாம்பாளையம் பகுதி விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். அவ்வாறு சாகு படி செய்யப்பட்ட வயல்களில் தற்போது கரும்பு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நிலை யில், தனியார் கரும்பு அரவை ஆலைதாரர்கள் ஒரு டன் கரும்பு ரூ.1,700 வீதம் விலை கொடுத்து மொத்தமாக வாங்கி செல்கின்ற னர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆலை கரும்பு  டன் ரூ.2  ஆயிரத்து 500 வீதம் விலை போன நிலையில், தற்போது விலை  வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசா யிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தேவூர் பகுதி  கரும்பு விவசாயிகள் கூறியதா வது, தேவூர் சுற்றுவட்டாரப் பகுதி யில் அதிகளவில் கிணற்று பாசன தண்ணீரை பயன்படுத்திய சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய் யப்பட்டுள்ளது. அறுவடை செய் யும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தனியார் கரும்பு ஆலைதாரர்கள் விவசா யிகளிடம் நேரடியாக கரும்பை கொள்முதல் செய்து, கரும்பு ஆலைகளில் நாட்டு சர்க்கரை தயாரித்து சித்தோடு, கவுந்தப் பாடி, சேலம் உள்ளிட்ட பகுதி களில் விற்பனை செய்து வரு கின்றனர். கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு 30 கிலோ எடை கொண்ட நாட்டு சர்க்கரை சிப்பம் ரூ.1500க்கு விற்பனையானது. தற்போது, நாட்டு சர்க்கரை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், கரும்பு ஆலைதாரர்கள் விவசாயிகளிடம் குறைவான விலை கொடுத்து கரும்புகளை வாங்கி செல்கின்ற னர். இதற்கிடையே கரும்பு அறு வடை செய்ய வரும் கூலித் தொழி லாளர்கள் கரும்பு வெட்டும் கூலியாக டன் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் வாங்குவதால் கரும்பு சாகு படி செய்யப்பட்டுள்ள விவசாயி கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ள னர். எனவே, ஆலைதாரர்கள் கரும்பு வெட்டுக்கூலி தர வேண் டும். கரும்பு விலையை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.