மரவள்ளி கிழங்கு விவசா யம் அமேசானை பிறப்பிட மாக கொண்டதாகும். பதி னேழாம் நூற்றாண்டில் இந்தியாவில் போர்ச்சுக்கீசியர்களால் முதன்முத லில் கேரளாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. தற்போது இந்தியாவில் 13 மாநிலங்களில் 3.1 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. தென்னிந்தியாவில் கேரளா, தமிழ் நாடு, ஆந்திரம் மாநிலங்களில் அதிக மாக மரவள்ளி சாகுபடி செய்யப்படு கிறது. துவக்கத்தில், உணவு பயிராகத் தான் இருந்தது. பின்னர், நாளடை வில் பணப்பயிராக மாறிவிட்டது. ஆம், மரவள்ளியில் இருந்து ஜவ்வரிசி மற் றும் ஸ்டார்ச் மாவு தயாரிப்பு வந்தப் பின் மாறியது. ஜாவா நாட்டிலிருந்து இறக்குமதி செய்ததால் ஜாவா அரிசி என அழைக்கப்பட்டு அது மருவி ஜவ் வரிசியானது.
கேரளாவில் மரவள்ளி கிழங்கு உணவு பயன்பாடுதான் அதிகம், தமி ழகத்தில் உணவு பஞ்சம் வந்தபோது மேற்கு, வடக்கு தமிழகத்தில் கைகொடுத்ததே மரவள்ளி கிழங்கு தான். கேரளாவில் தற்போதும் ஆண் டுக்கு மூன்று மாதத்திற்கு அங்கு உற் பத்தி ஆகும் மரவள்ளி கிழங்கு உண விற்கு கைக்கொடுக்கிறது. மற்ற காலங்களில் தமிழகத்தில் இருந்து தான் அங்கு போகவேண்டும். தமிழகத்திலும் மாநிலம் முழுவ தும் மரவள்ளி வடக்கு மண்டலங் களில்தான் பயிரிடப்படுகிறது. விவ சாயிகளை பொருத்தமட்டில் இது பணப்பயிர். இது பத்து மாத பயிர். ஏறக் குறைய ஓராண்டு பயிர். குச்சியை ஊன்றி வைத்துவிட்டால், அது துளிர் விட்டு வீட்டால், நன்செய் மண்ணிலும் வரும். புன்செய் மண்ணிலும் வரும். பெரும்பாலும் இது புன்செய் (மேட் டுக்காடு) வெள்ளாமைதான். தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரி யது திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் பெரும்பா லும் இது பயிரப்படுகிறது. அதிகமாக ஒன்றுபட்ட சேலம், வட ஆற்காடு மாவட்டங்கள்தான். அதனால்தான் மர வள்ளியில் இருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசி ஆலைகள் படிப்படிய அதிக மாக சிறு சிறு ஆலைகளாக சேலம் மாவட்டத்தில் துவங்கின. இதில் விவ சாயத் தொழிலாளர்கள் மற்றும் சிறு குறு விவசாயிகளும் வேலைகள் 800க்கும் அதிகமாக சிறுசிறு ஆலை கள் சேலம் மாவட்டத்தில் துவங்கப் பட்டது. இதில், விவசாய தொழிலாளர் கள் மற்றும் சிறுகுறு விவசாயிகளும் வேலைகள் பெற்று வருகின்றனர்.
இது ஒருகட்டத்தில் விவசாயிகளுக் கும் ஆலைகளுக்கும் இருந்த தொடர்பு அறுந்துபோய் எல்லா தொழி லையும்போல் இதிலும் புரோக்கர்கள் ஆதிக்கம் தலைதூக்கியது. அவர்கள் தான் ஒருகட்டத்தில் எல்லாவற்றை யும் தீர்மானிக்கும் புரோக்கர்கள் மாறி னர். தற்போதும்கூட அவர்களிடம் தான் குச்சிநட, அறுவடை செய்ய, அதை ஆலைகளுக்கு கொண்டு செல்ல, எடைபோட இப்படி அனைத் திலும் புரோகர்கள்தான் கோலோச்சு கின்றனர். அதனால்தான் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் துவக்க காலத் தில் இருந்து. குச்சிக்கிழங்கு அறுவடை முதல் தொடர்புடைய அனைத்தையும் அரசு தீர்மானிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறது. இன்று தமிழகத்தில் மரவள்ளி விவ சாயத்தை நம்பி சுமார் 20 லட்சம் விவ சாயிகள் இருப்பதாக ஒரு புள்ளிவிப ரம் கூறுகிறது. சமீபத்தில் தமிழ்நாடு முதல் அமைச்சர் கூறியதைப்போல், உரலுக்கு ஒரு இடி என்றால், மத் தாளத்திற்கு இருபக்கம் அடியாக குச்சிக்கிழங்கு விவசாயிகள் நிலை மாறி விட்டது. முன்பு போல் அக்கம் பக்கம் உள்ள சிறு குறு விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் சேர்ந் அறுவடை செய்வதோ இப்போது சாத்தியமில்லாமல் போயிற்று. எதி லும் குத்தகை; எங்கும் கான்ட்ராக்ட் என்றாகிவிட்டது. தலைசுமை எல்லாம் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. இதுபோல் ஆலைகளும் சிறு குறு என் பவை படிப்படியாக குறைத்து 300க்குள் சுருங்கிவிட்டது. இதில் பெரும் பெரும் ஆலைகள் சேலம் மல்லூர், நாமக்கல் ராசிபுரம், தருமபுரி, ஈரோடு பூனாச்சி போன்ற பகுதிகளில் வந்துவிட்டன. இதனால் இவற்றிக்கு விவசாயிகளால் கிழங்குகளை கொண்டு சேர்க்க முடி யாது. லாரி, வேலை ஆட்கள் என புரோக்கர்கள்தான். ஆம், அவர்கள் தான் கான்ட்ராக்ட் காரர்களும்கூட.
அடுத்து தரமான ஜவ்வரசி உற் பத்தி, அதன்மூலம் விவசாயிகளுக்கு அனுகூலம் என்கிற ரீதியில் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் செ சேலத்தில் அரசு கூட்டுறவு நிறுவனம் (SASO SEHVU) 1981 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன்மூலம் வட இந்திய வியாபா வேண்டுவோர் ஏலம்மூலம் எடுத்து செல்வர். இதன்மூலம் விவசாயிகளை விடவும் ஜவ்வரிசி உற்பத்தியாளர் களே பயன்பெருகின்றனர். இருந் தாலும், விவசாயிகளும் பயன்பெற்ற னர் எனலாம். தற்போது இந்த ஜவ்வரிசியிலும் மக்காசோளம் மாவு, மாவுகளை கலப் படம் செய்து குறைந்த விலைக்கு தருவதனால், சேகோசர்வ்-க்கு கொண்டு போகாமல் நேராக வெளி மார்க்கெட் வணிகம் கனஜோராக நடக்கிறது. ஆம், யானை தன் தலை யில் மண்ணை அள்ளிக்கொண்டு போட்டதைப்போல ஜவ்வரிசி ஆலை அதிபர்கள் செய்து கொண்டு இருக்கி றார்கள். அது அவர்களோடு போக வில்லை. விவசாயிகளையும் பெரு மளவு பாதித்தது. பாதிக்கிறது. மர வள்ளி கிழங்கு விலை தீர்மானிப்பது, எடை போடுவது, அள்ளுகூலி, தள்ளு கூலி என ஏற்கனவே இடுப்பு ஒடிந்து கிடந்த விவசாயிக்கு, இந்த கலப் படம் பேரிடியாக இறங்கி இருக்கிறது. விலைநிர்ணயம், கலப்படம், போன்ற பிரச்சனைகளை முன் வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் விவசாயிகளின் வாழ்வாதாரத் தைப் பாதுகாத்திட தொடர்ந்து போராடி வருகிறது. குறிப்பாக 2007 ஆம் ஆண்டு ரசாயனம் கலப்பு என்ற பெயரால் ஏற்பட்ட நெருக்கடியின் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முன்நின்று போராடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதவியால் அப் போதைய முதல்வர் கலைஞர் கரு ணாநிதியிடம் கொண்டு சென்று ஓர ளவு தீர்வு காணப்பட்டது.
அதன்பின் தற்போது குச்சிக் கிழங்கு மாவு அல்லாத மாவுகளை குறிப்பிட்ட அளவு கலந்து ஜவ்வரிசி செய்து, சேகோசர்வ் கொண்டு வரா மல், வெளி மார்க்கெட் விற்பனை நடந்து வருகிறது. இதனால் தற்போது மரவள்ளி கிழக்கு விவசாயிகள்தான் வாழ்தா? சாவதா? என்ற நெருக்கடி யில் சிக்கி தவிக்கின்றனர். கடந்த 29.07.2021ல் உணவு பாது காப்புதுறை ஆணையர் ஒரு வழிகாட்டு தல் பிறப்பித்து உள்ளார். அதில் கலப்படத்தை தடுக்கவும், சேகோசர்வ் மூலம் ஜவ்வரிசி வணிகம் செய்யவும் உத்தரவை அமலாக்க வேண்டிய சேலம் சேகோசாவ் நிர்வாக இயக் குனரும், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலரும், சேலம் மாவட்ட ஆட்சி தலைவரும் கும்பகரணன் உறக்கத்தில் ஆழ்ந்து உள்ளனர். உணவு பாதுகாப்பு துறை ஆணை யரின் உத்தரவை இந்த மூவரும் போட்டி போட்டு மிதித்து வருகின் றனர். இதன்விளைவு, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முதல் பருவம் மரவள்ளி கிழங்கு அறுவடை ஆன போது டன் ரூ15,000 வரை விற்பனை ஆனது. ஆனால் அது இந்த மாதம் பிறந்ததும் டன் ரூ8000 ஆக விலை வீழ்ந்துவிட்டது. விசாரித்த வகையில் ஜவ்வரசி 90% வெளி மார்க்கெட்டில் விற்பனை ஆவதாலும், கலப்படம் கலந்த ஜவ்வரிசி வெகுவா ஆகி விட்டதாலும், கிழங்குவிலை வீழ்ந்து விட்டது. தற்போது இயங்கிவரும் ஜவ்வரிசி 90% சேலம் மாவட்டத்தில் தான் உள்ளன.
இங்குள்ள உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர், சேகோசர்வ் நிர்வாக இயக்குனர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கடமை தவறிய செயலால் தான், அதாவது உணவு பாதுகாப்புத் துறை ஆணையரின் உத்தரவை அம லாக்காத விளைவுதான் குச்சிக் கிழங்கு விலை வீழ்ச்சிக்கு காரணம் என தெரிய வருகிறது. ஜவ்வரிசி ஒரு உணவு பொருள். அதில் கலப்படம் செய்வதும், அதற்கு துணை போவ தும் மன்னிக்க முடியாத குற்றச்செய லாகும். இந்த நிலையில்தான் அக்டோபர் 16 ஆம் தேதி நாமக்கல் வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ர மணியத்திடமும், சேலம் வந்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணனிடமும் நேரில் சந்தித்து 5 அம்ச கோரிக்கையை தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் அளித்தனர். இதில், உணவு பாதுகாப்பு ஆணை யரின் 29 ஆம்தேதியிட்ட சுற்றறிக் கையை கராறாக நடைமுறைப்படுத்த வேண்டும். உற்பத்தி ஆகும் அனைத்து ஜவ்வரிசியையும் சேலம் சேகோசர்வ் மூலம் மட்டுமே விநி யோகிக்க வேண்டும் என அரசு ஆணை வெளியிட வேண்டும். சேலம், நாமக்கல், திருச்சி, விழுப்புரம், பெரம் பலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி உள் ளிட்ட ஏழு மாவட்ட நியமன அலுவ லர்கள் கலப்படம் குறித்து கண் காணித்து உறுதிபடுத்திட வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக சேலம் சேகோசர்வ் நிர்வாக இயக்குனர் உற் பத்தி ஆகும் அனைத்து ஜவ்வரிசி களையும் சேகோசர்வ் மூலம் மட் டுமே வணிகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம்தான் ஜவ் வரிசி உற்பத்தியின் மையம் என்ப தால் சேலம் மாவட்ட உணவு பாது காப்பு அலுவலரை உடனடியாக மாற்றி, பொருத்தமான ஒருவரை நிய மிக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக தலை யிட்டு மரவள்ளி விவசாயிகளின் வாழ் வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.
-பி.தங்கவேலு