நாமக்கல், ஜன.24- பள்ளிபாளையம் பகுதியில் தவ றாக திசைகாட்டும் வகையில் வைக்கப் பட்டுள்ள வழிகாட்டி பலகையால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளி பாளையம் திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் பகுதியாக உள்ளது. தினந்தோறும் பல்வேறு தேவைக ளுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் இவ்வழியாக செல்லும் சாலையை பயன் படுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மேம் பாலம் அமைக்கும் பணிகள் துவங்கி யது. தற்போது பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு கூறுகளுக்கு மேம்பாலப் பணிகள் கார ணமாக போக்குவரத்து மாற்றம் செய் யப்பட்டு இருந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மாற்று வழியில் சென்று வந்த நிலையில், தற்போது பணிகள் ஓரளவு நிறைவு பெற்றுள்ளதால், மீண் டும் பழைய சாலையிலேயே வாகனங் கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில் புதிதாக மேம்பாலம் அமைக்கப் பட்டதால் மேம்பாலத்தின் கீழே சிவப்பு சிக்னல் அமைப்பது, வெள்ளை வர்ண கோடுகள் வரைவது, வழிகாட்டி பலகை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணி களை நெடுஞ்சாலைத் துறையினர் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோட்டிலிருந்து பள்ளிபாளையம் வழியே திருச்செங் கோட்டை இணைக்கும் பிரதான சாலை யில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி யால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குழப்பமடைந்து வருகின்ற னர். திருச்செங்கோட்டில் இருந்து எஸ்பிபி காலனி சாலை வழியாக பள்ளி பாளையம் வரும் சாலையில் ஈரோடு செல்வதற்கான வழி என வழிகாட்டி பலகை ஒன்று வலது புறமாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த வலது புறம் செல்லும் சாலையானது காவேரி ஆர்.எஸ். தனி யார் காகித ஆலைக்கு செல்லும் வழித் தடமாகும். இதனால் தொலைதூரங்க ளிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் குழப்பமடைந்து, பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலம் வழியே ஈரோடு செல்வதற்கு பதிலாக காவேரி ஆர்.எஸ். சாலை வழியாக தனியார் காகித ஆலைக்கு சென்று தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டி களின் குழப்பத்தை தவிர்க்கும் வகை யில், வழிகாட்டி பலகையை மாற்றிய மைக்க வேண்டும். அல்லது வழிகாட்டி பலகையில் திருத்தங்களை செய்து, குழப்பத்தை போக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.