districts

img

மாவட்ட ஆட்சியர் நிதியில் ஒப்புக்கு பராமரிப்பு பணியா?

திருப்பூர், ஜூலை 19- ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட் சியரின் சிறப்பு கட்டிடப் பராமரிப்பு நிதியில் மேற்கொள்ளப்படும் பணி யில் முறையாக பழுது பார்க்காமல் ஒப்புக்கு மேற்கொள்வதால் அங்கு படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட் டுள்ளது என பள்ளி மேலாண்மைக் குழுவினர் புகார் கூறியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், ஊத்துக் குளி ஆர்.எஸ்.பகுதியில் ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இப்பள்ளியின் மேலாண்மைக் குழு சார்பில் கல்வி யாளர் செ.நடேசன் மாவட்ட ஆட்சி யர் மற்றும் கல்வித்துறை அதிகாரி களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், கடந்த ஆண்டு இப்பள்ளி கட்டிடப் பராம ரிப்பு பணிக்கு ஒப்பந்தம் பெற்ற ஒப் பந்ததாரர் சரியாக பராமரிப்பு பணி களை மேற்கொள்ளவில்லை. இத னால், தரை தளத்தில் தூய்மைப்ப டுத்த கூட்டும் பொழுது மண், மண் ணாக வந்து கொண்டே இருக்கிறது. கரும்பலகை எழுத இயலாத நிலை யில் வழவழப்பாக உள்ளது. ஜன் னல்களின் தாழ்ப்பாள் கம்பிகள் கழன்று வந்துவிட்டன. மேலே உள்ள கூரை ஓடுகளைத் தாங்கி நிற் கும் மரச் சட்டங்களுக்கு வண்ணம்  பூசப்படாமல் உள்ளது. ஓடுகள் சரி யாக வேயப்படாததால் மழைநீர்  ஒழுகுகின்றன. கடந்த ஆண்டு பணி யில் இந்த குறைபாடுகள் உள்ளன.     இந்த ஆண்டு ஐந்து கட்டிடங்கள் பழுது பார்க்கும் பணிக்கு ஒப்பந் தம் விடப்பட்டுள்ளது. இரு கட்டிடங் களில் இப்பணிகள் முறையாக முடிக்கப்படாததால் அந்த கட்டிடங் களில் ஓதம் அடித்தல், மழை நீர் ஒழுகுதல் தொடர்கிறது. இதனால், வகுப்பறைகளில் மழைநீர் தேங்கி  வகுப்பறைகளை பயன்படுத்த முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது ஆனால், இந்த குறைபாடுகளைப் பற்றி தெரி வித்தால், கட்டடப் பொறியாளரும், மேற்படி பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரருடன் சேர்ந்து கொண்டு, பழுது பார்க்கும் பணி  முடிந்துவிட்டது. இனி வகுப்பறைக ளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.

இப்போது, அடுத்த ஒரு ஓட்டுக்  கட்டடம் பழுது பார்க்கும் பணி  நடந்து வருகிறது. இந்த கட்டடத்தில்  ஓடுகளைப் பிரித்து மரச்சட்டங்க ளைச் சரி செய்யாமலேயே, அந்த  சட்டங்களுக்கு உட்புறமாக வண் ணம் பூசி வருகின்றனர். மேலும், ஓடு களுக்கு மேல் உள்ள பழுதுபட்ட  பட்டைகளைச் சரி செய்யாமலேயே  அந்த பழைய பட்டையின் மீதே  காரையைப் போட்டு புதிதாக பட்டை பழுது பார்த்து காரை போட் டது போல் ஏமாற்றுகின்றனர்.  சரி செய்யத் தேவையில்லாமல் நன்றாக இருந்த தரைத்தளத்தை பெயர்த்து விட்டு, தரமற்ற வகை யில் தரைத்தளம் பணி நடைபெற் றுள்ளது. கதவு, ஜன்னல்களைப் பழுது பார்க்காமலேயே வண்ணப் பூச்சு செய்வதற்கு பட்டி பார்த்துள்ள னர். வகுப்பறை சுவர்களில் அரசால் வரையப்பட்ட ஓவியங்கள் அழிக் கப்பட்டு விட்டன. இதற்கான வீடியோ ஆதாரங்களும் உள்ளன. எனவே, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரடி யாக பள்ளிக்கு வருகை தந்து பழுது  பார்ப்பு பணிகளை ஆய்வு செய்து மாணவர்களுக்கும், பள்ளி ஆசிரி யர்களுக்கும் எவ்வித ஆபத்தும் ஏற் படாத வகையில் பள்ளிக்கூடங்கள் முறையாகப் பழுது பார்க்கப்படு வதை உத்தரவாதம் செய்து தர  வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து, திங்களன்று பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்து உள்ளனர். அவ ரும் உரிய பதில் கூறாத நிலையில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி  செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.