districts

img

2000 ரூபாய் நோட்டுகள் வாங்க பெட்ரோல் பங்குகளில் திடீர் கட்டுப்பாடு

 பள்ளிபாளையம், மே 23- பள்ளிபாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டுகள் வாங்க திடீர்  கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  ரிசர்வ் வங்கி கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறு வதாக அறிவித்தது. மேலும், செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ரூ.2000 நோட்டுகள் திரும்பப்  பெறுவதற்கான கால அவகாசம் அறிவிக் கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தற்போது நாடு முழுவதும் பல் வேறு இடங்களில் ரூ.2000 நோட்டுகள் பொதுமக்கள் மத்தியில் புழக்கத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, ஆன்லைனில் உணவு டெலிவரி செய்பவர்களில் 71 சத விகிதம் பேர் ரூ.2000 நோட்டுகளை வாங்குவ தாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் உள்ள பெட்ரோலிய பங்குகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், செப்டம்பர் 30 ஆம்  தேதி வரை ரூ.2000 நோட்டுகள் பெறப்படும்.  ஆனால், 2000 ரூபாய்க்கு முழுமையாக பெட் ரோல் அல்லது டீசல் நிரப்ப வேண்டும். ரூ.50 மற்றும் ரூ.100க்கு மட்டும் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்கு 2000 ரூபாய் நோட்டை கொடுத்தால் அது வாங்கப்படாது எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  அது வாடிக்கையாளர்களுக்கு தெரியப் படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்த திடீர் கட்டுப்பாடு வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.  கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம்  தேதியன்று ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள்  செல்லாது என ஒன்றிய அரசு அறிவித்தது.  அப்போது, ரூ.2000 நோட்டு அறிமுகப்படுத் தப்பட்டது. தற்போது, ஆறு ஆண்டுகளுக்கு பின் ரூ.2000 திரும்ப பெறப்படுமென ரிசர்வ்  வங்கி அறிவித்துள்ளது.   பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எப் போதும் பாதிக்கப்படுவது சாமானிய மக்களே.