districts

img

தபால் நிலையம் திடீரென மூடல்: பொதுமக்கள் போராட்டம்

சேலம், பிப்.19- ஜாகிர் அம்மாபாளையம் பகுதி யில் செயல்பட்டு வந்த துணை தபால் நிலையம் திடீரென மூடப்பட்டதால், பொதுமக்கள், போராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாவட்டம், ஜாகிர் அம்மா பாளையம், விஜயராகவன் நகர் பகு தியில் காசகாரனுர் துணை தபால்  நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த  தபால் நிலையத்தில் விஜயராகவன் நகர், ஜாகிர் அம்மாபாளையம், காச காரனுர் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் கணக்கு தொடங்கி வரவு - செலவு வைத்து வந்தனர். மேலும், தபால் நிலையத்தில் இருக் கக்கூடிய அனைத்து திட்டங்களிலும் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர். தங்க பத்திரத் திட்டம், நிரந்தர வைப் புத் தொகை, அன்றாட சேமிப்பு கணக்கு மற்றும் அஞ்சல் நிலைய பல்வேறு சேவைகளையும் பயன்ப டுத்தி வந்தனர். இதனால் கோடிக் கணக்கில் வருமானம் ஈட்டும் அஞ்சல் நிலையமாக செயல்பட்டு வந் தது. இந்நிலையில், இந்த தபால்  நிலையத்தை திடீரென மூடுவதாக சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் துறை யின் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்ட தால், இந்த அலுவலகத்தில் கணக்கு  வைத்திருப்பவர்கள் அதிர்ச்சிக்குள் ளாகினர். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அஞ்சல் துறை நிர்வாகம் இந்த நடவடிக்கை மேற்கொண்டதா கக் கூறி விஜயராகவன் நகர் பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள், திடீரென அஞ்சல் நிலையத்தின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அஞ்சல் நிலைய அதி காரிகளை கண்டித்தும், மூத்த குடி மக்கள் அதிகளவில் பயன்படுத்த படுத்தும் துணை அஞ்சல் நிலையத்தை  மூடுவதை கண்டித்தும், தொடர்ந்து இங்கு தபால் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என் றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப் பினர். இந்த தபால் நிலையத்தை தொடர்ந்து செயல்படுத்தாவிட்டால், மேற்கு கோட்ட அஞ்சல் அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும், என போராட்டக்காரர் கள் அறிவித்துள்ளனர். இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.