கோபி, டிச.21- கோபி அருகே ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப் பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தமி ழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று பங்கேற்று காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக, கோபி அருகே உள்ள நாகதேவம்பாளையம் பகுதியில் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகா தார நிலையத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நாகதேவம்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில், ஊராட்சி மன்றத் தலைவர் செங்கோட்டையன் மற்றும் வட்டார மருத்துவ அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக, மக்கள் பயன்பாட்டிற்கு துணை சுகாதார நிலையத்தை திறந்து வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, திமுக தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கதிர்வேல், ஊராட்சி துணைத்தலைவர் கோட்டீஸ்வரன் தலைமையில், திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.