தருமபுரி, டிச.22- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தருமபுரியில் நடைபெற்ற ஓய்வூதியர் தின நிகழ்ச்சியில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவன ஓய்வு பெற்ற ஊழியர் சங்கங்களின் சார்பில் ஓய்வூதியர் தினம் நிகழ்ச்சி தருமபுரியில் உள்ள ஊர்தி ஓட்டுனர் சங்க அலுவல கத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் டி.குப்பன் சிறப்புரையாற்றினார். இதில், அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பழனிச் சாமி, மாவட்ட செயலாளர் எம்.பெருமாள், அஞ்சல்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.சுப்பிரமணியம், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் டி.பாஸ்க ரன், ஆர்.கோபாலன், மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயலாளர் ஜி.பி.விஜியன், அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில நிர்வாகி கே.குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண் டும். அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடன டியாக நிரப்பி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.