districts

img

வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு

திருப்பூர், பிப்.12- திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து  பொது நிறுவனங்கள் குழுத்தலைவர் எ.பி.நந்தகுமார் தலை மையில் பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் புதனன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர் மாநகராட்சி, குமார்நகர் பகுதியில் தமிழ்நாடு  மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் 230/110  கே.வி துணை மின்நிலையத்தில் திறன் மேம்படுத்துதல் தொடர்பான பணி, திருப்பூர் தெற்கு வட்டம், முதலிபா ளையத்தில் தாட்கோ பின்னலாடை தொழிற்பேட்டை மையத் தில் இயங்கி வரும் பின்னலாடை தொழில் சாலைகளையும் மற்றும் தொழிற்பேட்டையில் அடிப்படை வசதிகளான சாலை  மேம்படுத்துதல், சுற்றுச்சுவர், குடிநீர் வசதிகள் மற்றும் சுகா தார வளாகம் ஆகிய பராமரிப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு  பணிகள் மேற்கொண்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு  சட்டமன்றப் பேரவை 2024-2025 பொது நிறுவனங்கள் குழுத்தலைவர் எ.பி.நந்தகு மார் தலைமையில் பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள்  ஆய்வு மேற்கொண்டனர். இதில், பொது நிறுவனங்கள் குழு  உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் உள் ளிட்ட பலர் உடனிருந்தனர்.