districts

அரசு விடுதிகளில் தரமான உணவு வழங்க மாணவர் சங்கம் வலியுறுத்தல்

நாமக்கல், செப்.2- மாணவர்கள் தங்கி பயி லும் அரசு விடுதிகளில் தர மான உணவு வழங்க வேண் டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய மாணவர் சங் கத்தின் நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றிய 4 ஆவது மாநாடு, அப்பகுதி யிலுள்ள சித்தி விநாயகர் மண்டபத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார் தலை மையில் ஞாயிறன்று நடைபெற்றது. முன்ன தாக, நாமகிரிபேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, நீட்  தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர் கள் முழக்கமிட்டவாறு மண்டபத்திற்கு பேர ணியாக சென்றனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தே.சரவணன் துவங்கவுரை யாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் ராம கிருஷ்ணன், நாமக்கல் ஒன்றியச் செயலா ளர் ரா.தனுஷ், தலைவர் நவீன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.மணிகண் டன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செய லாளர் சின்னசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சபாபதி உள் ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். மாணவர் சங் கத்தின் மாநில முன்னாள் தலைவர் ஏ.டி.கண்ணன் சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டில், மங்களபுரத்தில் அரசு கலைக்கல்லூரி, முள்ளுக்குறிச்சியில் அரசு ஐடிஐ கல்லூரி, நாமகிரிப்பேட்டையில் அரசு  பாலிடெக்னிக் கல்லூரி துவங்க வேண்டும். நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும் உள்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.  முள்ளுக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் நியமிக்க வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்கள் தங்கிப் பயிலும் விடுதிகளில் தரமான உணவு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முடிவில், சங்கத்தின் மாவட்டத் தலை வர் தங்கராஜ் நிறைவுரையாற்றினார். சங்கத் தின் நாமகிரிப்பேட்டை ஒன்றியத் தலைவ ராக சதீஷ்குமார், செயலாளராக நர்மதா மற்றும் 11 பேர் கொண்ட ஒன்றியக்குழு உறுப் பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தீபிகா நன்றி கூறினார்.